அத்தியாயம்: 1, பாடம்: 75, ஹதீஸ் எண்: 246


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَرَانِي لَيْلَةً عِنْدَ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَرَأَيْتُ رَجُلًا ‏ ‏آدَمَ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ لَهُ ‏ ‏لِمَّةٌ ‏ ‏كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ اللِّمَمِ قَدْ ‏ ‏رَجَّلَهَا ‏ ‏فَهِيَ تَقْطُرُ مَاءً مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ أَوْ عَلَى ‏ ‏عَوَاتِقِ ‏ ‏رَجُلَيْنِ يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ‏ ‏ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ ‏ ‏جَعْدٍ ‏ ‏قَطَطٍ ‏ ‏أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ ‏ ‏طَافِيَةٌ ‏ ‏فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ هَذَا ‏ ‏الْمَسِيحُ الدَّجَّالُ

“ஓர் இரவில் (இறையில்லம்) நான் கஅபாவின் அருகே (இருப்பதைப் போல் கனவில்) என்னைக் கண்டேன். அப்போது மாநிறம் கொண்ட மனிதர்களுள் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட தலைமுடிகளில் நீ பார்த்தவற்றுள் மிக அழகான தலைமுடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரி விட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி – அல்லது – இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். இவர்தாம் மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈஸா) என்று பதிலளிக்கப்பட்டது. அங்குப் பரட்டை முடியுடன், வலக்கண் குருடான ஒருவனுமிருந்தான். அவனுக்கிருந்த கண் (குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. இவன் யார்? என்று கேட்டேன். இவன்தான் அல்மஸீஹுத் தஜ்ஜால் என்று பதிலளிக்கப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

Share this Hadith:

Leave a Comment