و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ وَأَخْبَرَنَا أَيُّوبُ قَالَ وَقَالَتْ حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ :
اغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا قَالَ وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ مَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ
“ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி)க் குளிப்பாட்டுங்கள். மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.
அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் மய்யித்தானது, நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரலி) என்பது, இதனை அடுத்த 1559 ஹதீஸின்படி தெளிவாக்கப்பட்டுள்ளது