அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2111

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَهَلَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحَجٍّ وَأَهَلَّ بِهِ نَاسٌ مَعَهُ وَأَهَلَّ نَاسٌ بِالْعُمْرَةِ وَالْحَجِّ وَأَهَلَّ نَاسٌ بِعُمْرَةٍ وَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِالْعُمْرَةِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது, “உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் பூண்டு, ‘தல்பியா’ கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் பூண்டு முஹ்ரிமாயினர்.

நான் உம்ராவிற்காக மட்டும் முஹ்ரிமானவர்களுள் ஒருத்தியாக இருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment