و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ الْأَبْجَرِ عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ:
قُلْتُ لِابْنِ عَبَّاسٍ أُرَانِي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصِفْهُ لِي قَالَ قُلْتُ رَأَيْتُهُ عِنْدَ الْمَرْوَةِ عَلَى نَاقَةٍ وَقَدْ كَثُرَ النَّاسُ عَلَيْهِ قَالَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذَاكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُمْ كَانُوا لَا يُدَعُّونَ عَنْهُ وَلَا يُكْرَهُونَ
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கின்றேன்” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அதைப் பற்றி எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘மர்வா’ அருகில் (அதைச் சுற்றி வரும்போது) ஓர் ஒட்டகத்தின் மீதிருந்ததை நான் கண்டேன். அப்போது அவர்களைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்” என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி), “அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)! அவர்களைவிட்டு மக்கள் விரட்டப்படவோ வலுக் கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி)