و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ حَدَّثَنِي نُبَيْهُ بْنُ وَهْبٍ قَالَ بَعَثَنِي عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ وَكَانَ يَخْطُبُ بِنْتَ شَيْبَةَ بْنِ عُثْمَانَ عَلَى ابْنِهِ فَأَرْسَلَنِي إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ وَهُوَ عَلَى الْمَوْسِمِ فَقَالَ:
أَلَا أُرَاهُ أَعْرَابِيًّا إِنَّ الْمُحْرِمَ لَا يَنْكِحُ وَلَا يُنْكَحُ أَخْبَرَنَا بِذَلِكَ عُثْمَانُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்), தம் மகனுக்கு ஷைபான் பின் ஜுபைர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களின் மகளைப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, அப்போது ஹஜ் காலத்தில் இருந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் என்னை அனுப்பி(அத்திருமணத்திற்குச் சாட்சியாக இருந்து நடத்திவைக்க வருமாறு கோரி)னார்கள்.
அதற்கு அபான் (ரஹ்), “அவரை நான் விபரமில்லாத ஒரு பாமரானாகக் கருதுகிறேன். அறிந்து கொள்க! நிச்சயமாக இஹ்ராம் புனைந்தவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது; (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது” என்று சொன்னார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) எமக்கு அறிவித்தார்கள் என்றும் கூறி (மறுத்து)விட்டார்கள்.
அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)