و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ قَالَتْ:
قَالَتْ أُمُّ سَلَمَةَ لِعَائِشَةَ إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلَامُ الْأَيْفَعُ الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ قَالَ فَقَالَتْ عَائِشَةُ أَمَا لَكِ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ قَالَتْ إِنَّ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَالِمًا يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ وَفِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْهُ شَيْءٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ
உம்மு ஸலமா (ரலி), “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் ஒரு சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்கு இருக்கின்றதே!” என்று கூறிவிட்டு,
நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுதைஃபாவின் மனைவி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பருவ வயதை அடைந்துவிட்ட ஸாலிம் என் வீட்டிற்குள் வருகின்றார். அதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார். அதற்கு, “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய்-மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாம்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை எடுத்துரைத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி)