و حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ عَنْ ابْنِ عُلَيَّةَ عَنْ يُونُسَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ قَالَ قُلْتُ لِابْنِ عُمَرَ:
رَجُلٌ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَقَالَ أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَأَمَرَهُ أَنْ يَرْجِعَهَا ثُمَّ تَسْتَقْبِلَ عِدَّتَهَا
قَالَ فَقُلْتُ لَهُ إِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ أَتَعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ فَقَالَ فَمَهْ أَوَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமரை உங்களுக்குத் தெரியுமா? மாதவிடாயிலிருந்த அவருடைய மனைவியை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, (அவருடைய தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), ‘உங்கள் மகன் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் அவள் தனது இத்தாவை எதிர்பார்த்திருக்க வேண்டும் (பிறகு விரும்பினால் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!) என உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள்” என விளக்கினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்)
குறிப்புகள் :
இந்த ஹதீஸில் இப்னு உமர் (ரலி), தம்மைப் பற்றி ‘அவர்‘ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகின்றார்.
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருந்த தம் மனைவியைத் தலாக் சொல்லிவிட்டால், அதை மணவிலக்காக நீங்கள் கருதுவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாதவனாகவும், அதைப் பற்றிய முழுமையான அறிவில்லாதவனாகவும் இருந்துவிட்டால் மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா?” என்று கேட்டார்கள் என யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) கூறுகின்றார்.