அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 437

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏شَبِيبِ بْنِ غَرْقَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الْخَوْلَانِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ نَازِلًا عَلَى ‏ ‏عَائِشَةَ ‏
‏فَاحْتَلَمْتُ فِي ثَوْبَيَّ فَغَمَسْتُهُمَا فِي الْمَاءِ فَرَأَتْنِي جَارِيَةٌ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَأَخْبَرَتْهَا فَبَعَثَتْ إِلَيَّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقَالَتْ ‏ ‏مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ بِثَوْبَيْكَ قَالَ قُلْتُ رَأَيْتُ مَا يَرَى النَّائِمُ فِي مَنَامِهِ قَالَتْ هَلْ رَأَيْتَ فِيهِمَا شَيْئًا قُلْتُ لَا قَالَتْ فَلَوْ رَأَيْتَ شَيْئًا غَسَلْتَهُ لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَحُكُّهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَابِسًا بِظُفُرِي ‏

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒருநாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு, உறக்கத்தில் விந்து வெளியாகி விட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் ஊற வைத்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்து விட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்). அப்போது அவர்கள், “உங்கள் இரு ஆடைகளையும் அவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். நான், “தூங்கக் கூடிய(ஓர் ஆணான)வர் கனவில் காண்பதை நான் கண்டு விட்டேன்” என்று கூறினேன். “அந்த இரு ஆடைகளில் (விந்து) எதையும் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். “அப்படியே எதையேனும் நீங்கள் கண்டிருந்தாலும் ஆடைகளைக் கழுவத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுக் காய்ந்து போயிருக்கும் பகுதியை நான் என் நகத்தால் சுரண்டித்தான் விடுவேன் (கழுவ மாட்டேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்-கவ்லானீ (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment