அத்தியாயம்: 2, பாடம்: 33, ஹதீஸ் எண்: 438

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏فَاطِمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَتْ ‏
‏جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِحْدَانَا يُصِيبُ ثَوْبَهَا مِنْ دَمِ الْحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ بِهِ قَالَ ‏ ‏تَحُتُّهُ ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ ثُمَّ تَنْضَحُهُ ثُمَّ تُصَلِّي فِيهِ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ ‏ ‏وَمَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏وَعَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவட்டும். பின்னர் அந்த ஆடையிலேயே தொழுது கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

குறிப்பு:

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தூய்மையடையும்வரை தொழக்கூடாது. தூய்மை அடைந்த பின்னர் தொழும்போது மாதவிடாய் பட்டுவிட்ட உடைப் பகுதியை மட்டும் சுத்தப் படுத்திக் கொண்டால் போதும்; முழு உடையையும் துவைத்து உடுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அக்காலத்தில் அங்கு நிலவிய தண்ணீர் பஞ்சமும் நபித்தோழர்/தோழியரது ஆடைகளின் குறைந்த எண்ணிக்கையும் இங்குக் கருத்தில் கொள்ளத் தக்கன.

Share this Hadith:

Leave a Comment