அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 340

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏
‏تَوَضَّأَ ‏ ‏عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏ ‏يَوْمًا وُضُوءًا حَسَنًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ ‏ ‏مَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لَا ‏ ‏يَنْهَزُهُ ‏ ‏إِلَّا الصَّلَاةُ غُفِرَ لَهُ مَا خَلَا مِنْ ذَنْبِهِ ‏

ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும், ‘இவ்வாறு அங்கத் தூய்மை செய்து விட்டுத் தொழுவதற்கென்றே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்பவரது (சிறு) முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக ஹும்ரான் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment