அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 968

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يَقُولُ :‏ ‏

لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ

என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்), “உடல் சுகத்தைப்  பெரிதாக நினைத்தால் கல்வியை அடைய முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்)


குறிப்பு :

இத்தகவல் தலைப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது. இது ஹதீஸும் அல்ல.
அறிவிப்பாளர் நபித்தோழரும் அல்லர். இருப்பினும், முஸ்லிம் மூலத்தில் இவ்வாறே உள்ளதால் நமது பதிப்பிலும் மாற்றமின்றிப் பதிந்துள்ளோம்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 967

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَزِينٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ طَهْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَجَّاجِ وَهُوَ ابْنُ حَجَّاجٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏أَنَّهُ قَالَ ‏:‏

سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ وَقْتِ الصَّلَوَاتِ فَقَالَ ‏ ‏وَقْتُ صَلَاةِ الْفَجْرِ مَا لَمْ يَطْلُعْ قَرْنُ الشَّمْسِ الْأَوَّلُ وَوَقْتُ صَلَاةِ الظُّهْرِ إِذَا زَالَتْ الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ صَلَاةِ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَيَسْقُطْ قَرْنُهَا الْأَوَّلُ وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ إِذَا غَابَتْ الشَّمْسُ مَا لَمْ يَسْقُطْ الشَّفَقُ وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகை நேரங்கள் குறித்து வினவப்பட்டபோது, “ஃபஜ்ருத் தொழுகையின் நேரம், சூரியனின் மேற்புற விளிம்பு வெளிப்படுவதற்கு முன்புவரை உள்ளது. லுஹ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தது முதல் அஸ்ரு நேரம் வருவதற்கு முன்புவரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிபுத் தொழுகையின் நேரம், சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 966

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو :‏‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏وَقْتُ الظُّهْرِ إِذَا ‏ ‏زَالَتْ ‏ ‏الشَّمْسُ وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبْ الشَّفَقُ وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ الشَّمْسُ فَأَمْسِكْ عَنْ الصَّلَاةِ فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ

“லுஹ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமம்) ஆகி, அஸ்ரு நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம், சூரியன் மஞ்சள்நிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம், செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது. ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்,ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 965

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏وَاسْمَهْ ‏ ‏يَحْيَى بْنُ مَالِكٍ الْأَزْدِيُّ وَيُقَالُ الْمَرَاغِيُّ ‏ ‏وَالْمَرَاغُ ‏ ‏حَيٌّ مِنْ ‏ ‏الْأَزْدِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو :‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏وَقْتُ الظُّهْرِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ ‏ ‏ثَوْرُ ‏ ‏الشَّفَقِ وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ ‏


حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏رَفَعَهُ مَرَّةً وَلَمْ يَرْفَعْهُ مَرَّتَيْنِ

“லுஹ்ருத் தொழுகையின் நேரம் அஸ்ரு நேரம் வரும்வரை உள்ளது. அஸ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிபுத் தொழுகையின் நேரம் செம்மேகம் பரவி மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது ஃபஜ்ருத் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), யஹ்யா பின் அபீபக்ரு (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்புகளிலும் இந்த ஹதீஸ், “நபி (ஸல்) கூறினார்கள்” என்று ஒருமுறையும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு கூறியதாக இருமுறையும் அறிவிக்கப்படுவதாக ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 964

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو :‏‏

أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا صَلَّيْتُمْ الْفَجْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَطْلُعَ قَرْنُ الشَّمْسِ الْأَوَّلُ ثُمَّ إِذَا صَلَّيْتُمْ الظُّهْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَحْضُرَ الْعَصْرُ فَإِذَا صَلَّيْتُمْ الْعَصْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ تَصْفَرَّ الشَّمْسُ فَإِذَا صَلَّيْتُمْ الْمَغْرِبَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَسْقُطَ الشَّفَقُ فَإِذَا صَلَّيْتُمْ الْعِشَاءَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى نِصْفِ اللَّيْلِ

“நீங்கள் ஃபஜ்ருத் தொழுதால் அதன் நேரம் சூரியனின் விளிம்பு வெளிப்படும்வரையாகும். பின்னர் நீங்கள் லுஹ்ருத் தொழுதால் அதன் நேரம் (நண் பகலிலிருந்து) அஸ்ரு(த் தொழுகையின்) நேரம் வரும்வரையாகும். பின்னர் நீங்கள் அஸ்ருத் தொழுதால், அதன் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாகும் வரையாகும். பின்னர் நீங்கள் மஃக்ரிபுத் தொழுதால், அதன் நேரம் (சூரியன் விழுந்து) செம்மேகம் மறையும் வரையாகும். பின்னர் நீங்கள் இஷாத் தொழுதால் அதன் நேரம் (செம்மேகம் மறைந்ததிலிருந்து) நள்ளிரவு வரையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 963

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ وَاقِعَةٌ فِي حُجْرَتِي

சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ரைத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 962

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏فِي حُجْرَتِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்து கொண்டிருக்க அஸ்ருத் தொழுகையைத் தொழும்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 961

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ ‏ ‏يَفِئْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ ‏


و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لَمْ يَظْهَرْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ

“சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் (சுவரில்) நிழல் விழாமலும் இருக்கும்போது நபி (ஸல்) அஸ்ரைத் தொழுவார்கள்”

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… நிழல் இன்னும் தெரியாத நிலையிலும் …” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 960

أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏فَأَخْبَرَهُ أَنَّ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ ‏ ‏بِالْكُوفَةِ ‏فَدَخَلَ عَلَيْهِ ‏ ‏أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ ‏ ‏فَقَالَ :‏

مَا هَذَا يَا ‏ ‏مُغِيرَةُ ‏ ‏أَلَيْسَ قَدْ عَلِمْتَ ‏ ‏أَنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ بِهَذَا أُمِرْتُ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِعُرْوَةَ ‏ ‏انْظُرْ مَا تُحَدِّثُ يَا ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَوَ إِنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقْتَ الصَّلَاةِ ‏


فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏كَذَلِكَ كَانَ ‏ ‏بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏وَلَقَدْ ‏ ‏حَدَّثَتْنِي ‏ ‏عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُصَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ ‏ ‏تَظْهَرَ

கூஃபா நகரின் ஆளுநராயிருந்த முஃகீரா பின் ஷுஅபா (ரஹ்) ஒருநாள் (அஸ்ருத்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி), “ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்) முஃகீரா? ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து தொழுவித்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். மீண்டும் ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். (ஐவேளைத் தொழுகையை முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) இவ்வாறே நான் (உங்களுக்குச் செய்து காட்டுமாறு) பணிக்கப்பட்டேன் என்று கூறியதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன? என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) வழியாக அவரின் மகன் பஷீர் (ரஹ்)


குறிப்பு :

ஒருநாள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) (அஸ்ருத்) தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) வந்து மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “உர்வாவே! நீங்கள் என்ன அறிவிக்கின்றீர்கள் என்பதை நன்றாகக் கவனித்துச் சொல்லுங்கள். ஜிப்ரீல்(அலை) தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை நேரத்தை (பிரித்து இனம்) காட்டினார்களா?” என்று உர்வா (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, “(ஆம்) அவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்உத் (ரஹ்) தம் தந்தை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்” என்றும் “எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகையைத் தொழுவார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்றும் உர்வா (ரஹ்) கூறியதாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 959

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَمَا إِنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏قَدْ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏اعْلَمْ مَا تَقُولُ يَا ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا مَسْعُودٍ ‏ ‏يَقُولُ ‏:‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏نَزَلَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ

“ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்” என்று சொல்லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) வழியாக அவரின் மகன் பஷீர் (ரஹ்)


குறிப்பு :

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அஸ்ருத் தொழுகையை ( ஒருநாள்) சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), “ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ருத் தொழுகையை இந்நேரத்துக்கு முந்தியே தொழுதார்கள்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “உர்வா! நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்), மேற்காணும் ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸூஹ்ரீ குறிப்பிடுகின்றார்.

ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவுக்கு மறுநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக இருந்து ஐவேளைகளின் உரிய நேரத்தில் தொழுகை நடத்திக் காட்டினார்கள்.