அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 758

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَالْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ وَلَا ‏ ‏نَكْفِتَ ‏ ‏الثِّيَابَ وَلَا الشَّعْرَ ‏

“நெற்றி, (தமது கையால் தமது மூக்கை நோக்கி – நெற்றி என்பது மூக்கு உட்பட என்பதைப் போன்று சைகை செய்தார்கள்) “இரு(உள்ளங்)கைகள், இரு(முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 757

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏أُمِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَسْجُدَ عَلَى سَبْعٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكْفِتَ ‏ ‏الشَّعْرَ وَالثِّيَابَ

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி கட்டளையும், முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடையும் நபி (ஸல்) விதிக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 756

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلَا ‏ ‏أَكُفَّ ‏ ‏ثَوْبًا وَلَا شَعْرًا ‏

“நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும் (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 755

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏

‏أُمِرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكُفَّ ‏ ‏شَعْرَهُ وَثِيَابَهُ ‏


‏هَذَا حَدِيثُ ‏ ‏يَحْيَى ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَنُهِيَ أَنْ ‏ ‏يَكُفَّ ‏ ‏شَعْرَهُ وَثِيَابَهُ الْكَفَّيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَالْجَبْهَةِ

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) கட்டளையிடப்பட்டார்கள். தமது தலைமுடி ஆடை ஆகியவற்றை(ஸஜ்தாவின்போது தரையில் படாதவாறு)ப் பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

அபுர்ரபீஉ(ரஹ்) வழி அறிவிப்பில், “இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு (ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாமென்றும் தடை விதிக்கப்பட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

தலைமுடியைக் கொண்டை போட்டு முடிந்து முன்நெற்றிப்பக்கம் எடுத்துவிட்டுக் கொள்வது அக்கால அரபியரிடம் இருந்தவொரு பழக்கமாகும்.

அத்தியாயம்: 4, பாடம்: 43, ஹதீஸ் எண்: 754

حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِقْلُ بْنُ زِيَادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَوْزَاعِيَّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ ‏ ‏قَالَ :‏

‏كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ ‏ ‏فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு நாள்) தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள், “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!” என்று என்னிடம் கூறினார்கள். “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்” என்றேன். அதற்கு, “இதையன்றி வேறு ஏதேனும் (கோருவீராக)” என்றார்கள். நான், “(இல்லை) அதுதான்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாக ஸஜ்தாச் செய்து எனக்கு உதவுவீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 43, ஹதீஸ் எண்: 753

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْأَوْزَاعِيَّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ ‏ ‏قَالَ لَقِيتُ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ : ‏

‏أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللَّهُ بِهِ الْجَنَّةَ ‏ ‏أَوْ قَالَ قُلْتُ بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ ‏ ‏فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً


‏قَالَ ‏ ‏مَعْدَانُ ‏ ‏ثُمَّ لَقِيتُ ‏ ‏أَبَا الدَّرْدَاءِ ‏ ‏فَسَأَلْتُهُ ‏ ‏فَقَالَ لِي مِثْلَ مَا قَالَ لِي ‏ ‏ثَوْبَانُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, “என்னை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிக்கத் தக்க, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி), (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது, “இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றார்கள்.

பின்னர் நான் அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) கூறியதைப் போன்றே கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி) & அபூதர்தா (ரலி) வழியாக மஅதான் பின் அபீதல்ஹா அல்யஃமரீ (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 752

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏نَبَّأَتْهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ ‏ ‏سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏قَتَادَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழும்போது) தமது ருகூஉவிலும் ஸஜ்தாவிலும், “ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்” (இறைவா! நீ தூயவன்! மிகப் பரிசுத்தமானவன்! வானவர்களின், வானவர் தலைவர் ஜிப்ரீலின் அதிபதி) என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 751

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

فَقَدْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةً مِنْ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

ஒருநாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (ஸஜ்தாவில்) இருந்தார்கள். நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் எனது கை பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹும்ம அஊது பி ரிளாக்க மின் ஸகதிக்க; வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க; வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்ஸிக்க” (பொருள் : இறைவா உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும்; உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன். இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்து கொண்டதைப் போன்றே நீ இருக்கின்றாய்) என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 750

و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏كَيْفَ تَقُولُ أَنْتَ فِي الرُّكُوعِ قَالَ أَمَّا سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ:‏‏

افْتَقَدْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ ‏ ‏فَتَحَسَّسْتُ ‏ ‏ثُمَّ رَجَعْتُ فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنِّي لَفِي شَأْنٍ وَإِنَّكَ لَفِي آخَرَ

நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் துணைவியருள் எவரிடத்தோ சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில்/ஸஜ்தாவில், “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த” (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் வேறு எண்ணத்தில் இருந்தேன். ஆனால் நீங்கள் (அதற்கு மாறான) மற்றோர் எண்ணத்தில் இருக்கின்றீர்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

நான், அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுவேன். ஏனெனில், அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, இப்னு அபீமுலைக்கா (ரஹ்)  மேற்காணும் ஹதீஸை எனக்கு அறிவித்திருக்கின்றார்” என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 749

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ مِنْ قَوْلِ ‏ ‏سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَاكَ تُكْثِرُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَالَ خَبَّرَنِي رَبِّي أَنِّي ‏ ‏سَأَرَى عَلَامَةً فِي أُمَّتِي فَإِذَا رَأَيْتُهَا أَكْثَرْتُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَدْ رَأَيْتُهَا ‏‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏فَتْحُ ‏ ‏مَكَّةَ ‏وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ ‏ ‏أَفْوَاجًا ‏ ‏فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது தொழுகையில்) மிகுதியாக, “ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி” (அல்லாஹ் மிகத் தூயவன்! அவனைப் புகழ்ந்து துதிக்கின்றேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அவனிடமே மீளுகின்றேன்) என்று கூறிவந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கின்றேன் (இதற்கு என்ன காரணம்?)” என்று கேட்டேன். அதற்கு, “என் சமுதாயத்தாரைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை நான் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுகொண்டேன்”; “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து சேரும்போது, அல்லாஹ்வின் மார்க்க(மான இஸ்லா)த்தில் அணியணியாய் மக்கள் வந்து இணைவதைக் காணும்போது, (நபியே!) உமதிறைவனின் புகழுக்கொப்ப அவனைப் புகழ்ந்து போற்றுவீராக! மேலும் அவனிடம் அதிகம் மன்னிப்புக் கோருவீராக! அவன் மிக்க மன்னிப்பவனாவான் (110:1-3) இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)