அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2571

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏إِنَّ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ : ‏

أَنَا أَعْلَمُ النَّاسِ بِالْحِجَابِ لَقَدْ كَانَ ‏ ‏أُبَيُّ بْنُ كَعْبٍ ‏ ‏يَسْأَلُنِي عَنْهُ قَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏أَصْبَحَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَرُوسًا ‏ ‏بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏قَالَ وَكَانَ تَزَوَّجَهَا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فَدَعَا النَّاسَ لِلطَّعَامِ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ فَجَلَسَ رَسُولُ اللَّهِ وَجَلَسَ مَعَهُ رِجَالٌ بَعْدَ مَا قَامَ الْقَوْمُ حَتَّى قَامَ رَسُولُ اللَّهِ فَمَشَى فَمَشَيْتُ مَعَهُ حَتَّى بَلَغَ بَابَ حُجْرَةِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏ثُمَّ ظَنَّ أَنَّهُمْ قَدْ خَرَجُوا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ جُلُوسٌ مَكَانَهُمْ فَرَجَعَ فَرَجَعْتُ الثَّانِيَةَ حَتَّى بَلَغَ حُجْرَةَ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَرَجَعَ فَرَجَعَتْ فَإِذَا هُمْ قَدْ قَامُوا ‏ ‏فَضَرَبَ ‏ ‏بَيْنِي وَبَيْنَهُ بِالسِّتْرِ وَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ

ஹிஜாப் சட்டம் (பற்றிய பின்னணி) குறித்து மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான் என்பதால் உபை பின் கஅப் (ரலி) என்னிடம் அதைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) அவர்களை மதீனா நகரில் மணமுடித்து, மணமகனாகி இருந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள்.

மக்கள் (விருந்து முடிந்து) எழுந்து சென்ற பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறுசிலரும் அமர்ந்திருந்தனர். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (தம் மனைவி) ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (விருந்து நடந்த வீட்டில்) அமர்ந்திருந்தவர்கள் (அனைவரும்) வெளியேறியிருப்பர் எனக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போதும் சிலர் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கிருந்து திரும்பிவிட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை அடைந்தார்கள். மீண்டும் (புதுமணப் பெண்ணிருந்த) வீட்டிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் நானும் திரும்பினேன். இப்போது அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டிருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கும் தமக்குமிடையே திரையொன்றை இட்டார்கள். அப்போதுதான், அல்லாஹ் ஹிஜாப் வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2570

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏وَعَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏مُعْتَمِرٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مِجْلَزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ : ‏

لَمَّا تَزَوَّجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏زَيْنَبَ بِنْتَ جَحْشٍ ‏ ‏دَعَا الْقَوْمَ فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ قَالَ فَأَخَذَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ مِنْ الْقَوْمِ ‏


زَادَ ‏ ‏عَاصِمٌ ‏ ‏وَابْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏فِي حَدِيثِهِمَا قَالَ فَقَعَدَ ثَلَاثَةٌ ‏ ‏وَإِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَ لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقُوا قَالَ فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَدْ انْطَلَقُوا قَالَ فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ قَالَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏” ‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ ‏ ‏إِنَاهُ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا ‏

நபி (ஸல்), ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை  (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) (அங்கிருந்து வெளியேற) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

ஆஸிம் (ரஹ்) மற்றும் இப்னு அப்தில் அஃலா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில்,

— ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) (ஸைனப் (ரலி) இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். இறுதியாக, அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள்.

நான் சென்று, “அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்” என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) உள்ளே சென்றார்கள். நானும் அவர்களுடன் உள்ளே நுழையப்போனேன். அதற்குள் நபி (ஸல்) எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்” என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான் –- என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2569

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ : ‏

مَا ‏ ‏أَوْلَمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ أَكْثَرَ ‏ ‏أَوْ أَفْضَلَ ‏ ‏مِمَّا ‏ ‏أَوْلَمَ ‏ ‏عَلَى ‏ ‏زَيْنَبَ ‏فَقَالَ ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏بِمَا ‏ ‏أَوْلَمَ ‏ ‏قَالَ أَطْعَمَهُمْ خُبْزًا وَلَحْمًا حَتَّى تَرَكُوهُ

அனஸ் பின் மாலிக் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட அதிகமாக அல்லது சிறப்பாகத் தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் மணவிருந்து அளிக்கவில்லை” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாபித் அல்புனானீ (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?” என்று (அனஸ் (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி), “மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள்; மக்கள் (மிஞ்சிய) உணவை விட்டுச்சென்றனர்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக, அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்

அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2568

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي كَامِلٍ ‏ ‏سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏قَالَ : ‏

مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْلَمَ ‏ ‏عَلَى امْرَأَةٍ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ ‏ ‏مَا ‏ ‏أَوْلَمَ ‏ ‏عَلَى ‏ ‏زَيْنَبَ ‏ ‏فَإِنَّهُ ذَبَحَ شَاةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்ட போது அளித்த மணவிருந்தைப் போன்று தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளித்ததை நான் பார்க்கவில்லை; ஏனெனில், (ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓர் ஆட்டை அறுத்(து மணவிருந்தளித்)தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2567

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏وَهَذَا حَدِيثُ ‏ ‏بَهْزٍ ‏ ‏قَالَ : ‏

لَمَّا ‏ ‏انْقَضَتْ ‏ ‏عِدَّةُ ‏ ‏زَيْنَبَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِزَيْدٍ ‏ ‏فَاذْكُرْهَا عَلَيَّ قَالَ فَانْطَلَقَ ‏ ‏زَيْدٌ ‏ ‏حَتَّى أَتَاهَا وَهِيَ تُخَمِّرُ عَجِينَهَا قَالَ فَلَمَّا رَأَيْتُهَا عَظُمَتْ فِي صَدْرِي حَتَّى مَا أَسْتَطِيعُ أَنْ أَنْظُرَ إِلَيْهَا أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَكَرَهَا فَوَلَّيْتُهَا ظَهْرِي وَنَكَصْتُ عَلَى عَقِبِي فَقُلْتُ يَا ‏ ‏زَيْنَبُ ‏ ‏أَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُكِ قَالَتْ مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى ‏ ‏أُوَامِرَ رَبِّي فَقَامَتْ إِلَى مَسْجِدِهَا وَنَزَلَ الْقُرْآنُ وَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَخَلَ عَلَيْهَا بِغَيْرِ إِذْنٍ قَالَ فَقَالَ وَلَقَدْ رَأَيْتُنَا أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَطْعَمَنَا الْخُبْزَ وَاللَّحْمَ حِينَ امْتَدَّ النَّهَارُ فَخَرَجَ النَّاسُ وَبَقِيَ رِجَالٌ يَتَحَدَّثُونَ فِي الْبَيْتِ بَعْدَ الطَّعَامِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاتَّبَعْتُهُ فَجَعَلَ يَتَتَبَّعُ حُجَرَ نِسَائِهِ يُسَلِّمُ عَلَيْهِنَّ وَيَقُلْنَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ قَالَ ‏ ‏فَمَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَنَّ الْقَوْمَ قَدْ خَرَجُوا أَوْ ‏ ‏أَخْبَرَنِي قَالَ فَانْطَلَقَ حَتَّى دَخَلَ الْبَيْتَ فَذَهَبْتُ أَدْخُلُ مَعَهُ فَأَلْقَى السِّتْرَ بَيْنِي وَبَيْنَهُ وَنَزَلَ الْحِجَابُ قَالَ وَوُعِظَ الْقَوْمُ بِمَا وُعِظُوا بِهِ ‏


زَادَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏فِي حَدِيثِهِ   ‏لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ ‏ ‏إِنَاهُ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏وَاللَّهُ لَا ‏ ‏يَسْتَحْيِي مِنْ الْحَقِّ

ஸைனப் (ரலி) அவர்களுடைய (கணவர் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) மணவிலக்குச் செய்ததையடுத்து) காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைத் (ரலி) அவர்களிடம், “ஸைனபிடம் என்னை(மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு” என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.

ஸைத் (ரலி) கூறுகின்றார்கள்:

ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரை (மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.

எனவே, அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, “ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உன்னை மணக்க விரும்புவதை) உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்” என்றேன். அதற்கு அவர், “நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை” என்று கூறிவிட்டுத் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.

அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது. (அதில், “(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மண முடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.

அனஸ் (ரலி) கூறுகின்றார்கள்: பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நண்பகல் வேளையில் எங்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் (மணவிருந்தாக) உண்ணக் கொடுத்தது எனக்கு நினைவில் உள்ளது.

அப்போது மக்கள் (விருந்து) உண்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். சிலர் மட்டும் உண்ட பின்பும் அவ்வீட்டிலேயே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் தம் துணைவியரின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறலானார்கள். அப்போது துணைவியர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் (புது) மனைவியை எவ்வாறு கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். பிறகு (பேசிக் கொண்டேயிருந்த) மக்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை நான் அவர்களிடம் தெரிவித்தேனா, அவர்கள் (வஹீ மூலம் அறிந்து) என்னிடம் தெரிவித்தார்களா என்று எனக்குச் சரியாக நினைவில்லை. அந்த வீட்டிற்குச் சென்று நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் நுழையப் போனேன். அப்போது அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டுவிட்டார்கள். அப்போது ஹிஜாப் பற்றிய இறைவசனமும் அருளப்பெற்று, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அறிவுரை கிடைத்தது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்குக் காத்து) இருக்க வேண்டாம்” என்று தொடங்கும் (33:53ஆவது) வசனமே ஹிஜாப் பற்றிய அந்த வசனமாகும் என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.