و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ حَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِخَرْصِهَا تَمْرًا
قَالَ يَحْيَى الْعَرِيَّةُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ ثَمَرَ النَّخَلَاتِ لِطَعَامِ أَهْلِهِ رُطَبًا بِخَرْصِهَا تَمْرًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு ‘அராயா’வினருக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
குறிப்பு :
‘அரிய்யா’ என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக பேரீச்ச மரத்திலுள்ள செங்காய்களைத் தோராயமாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு மாற்றிக்கொள்வதாகும் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்.