حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ:
كُنَّا نُخَابِرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُصِيبُ مِنْ الْقِصْرِيِّ وَمِنْ كَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ فَلْيُحْرِثْهَا أَخَاهُ وَإِلَّا فَلْيَدَعْهَا
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் ‘முகாபரா’ முறையில் விவசாயம் செய்துவந்தோம். அப்போது (குத்தகைதாரரிடம்) கதிர்களைப் போரடித்து எஞ்சியுள்ள தானியத்தையும் (நீரோட்டம் நன்றாக உள்ள பகுதியின்) குறிப்பிட்ட விளைச்சலையும் பெற்றுவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நிலம் வைத்திருப்பவர் அதைத் தாமே விளைவிக்கட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (இலவசமாகப்) விளைவிக்கக் கொடுத்து விடட்டும். இல்லாவிட்டால் அதை அப்படியே வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
‘முகாபரா‘ என்பது விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயியிடம் முன் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.