அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2870

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ ‏ ‏حَدَّثَهُ قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَأْخُذُ الْأَرْضَ بِالثُّلُثِ أَوْ الرُّبُعِ ‏ ‏بِالْمَاذِيَانَاتِ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ فَقَالَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ لَمْ يَزْرَعْهَا فَلْيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ لَمْ يَمْنَحْهَا أَخَاهُ فَلْيُمْسِكْهَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் “நீர் நிலையோரம் (நன்கு) விளையும் பயிர்களில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் கொடுத்துவிடுகிறோம்” எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தை(க் குத்தகைக்கு)ப் பெற்றுவந்தோம். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்று, “நிலம் வைத்திருப்பவர் அதில் தாமே விளைக்கட்டும். அவ்வாறு விளைக்காவிட்டால் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் எதிர் பாராமல் விளைவிக்க) இலவசமாகக் கொடுத்துவிடட்டும். இல்லையெனில் அதை (அப்படியே) வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: