அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2881

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ: ‏
أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي إِمَارَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏وَصَدْرًا مِنْ خِلَافَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلَافَةِ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يُحَدِّثُ فِيهَا بِنَهْيٍ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَخَلَ عَلَيْهِ وَأَنَا مَعَهُ فَسَأَلَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْمَزَارِعِ فَتَرَكَهَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بَعْدُ وَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا بَعْدُ قَالَ زَعَمَ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهَا ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ فَتَرَكَهَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏بَعْدَ ذَلِكَ فَكَانَ لَا ‏ ‏يُكْرِيهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்திலும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) ஆட்சியில் ஆரம்பக் கட்டத்திலும் இப்னு உமர் (ரலி) தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். முஆவியா (ரலி) ஆட்சியின் இறுதி நாட்களில் “நபி (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். இப்னு உமர் (ரலி), ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் அது குறித்து வினவினார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதையடுத்து, இப்னு உமர் (ரலி) தமது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டார்கள். பின்னர் அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்கப்பட்டால், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்துள்ளார்கள் என்பதில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) உறுதியான கருத்துக் கொண்டிருக்கின்றார்” என விடையளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

இஸ்மாயீல் இப்னு உலய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “ … எனவே, அதன் பின்னர் இப்னு உமர் (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று கூடுதல் தெளிவாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: