حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِابْنِ حُجْرٍ قَالَا حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْمُغِيرَةِ عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ قَالَ:
اجْتَمَعَ حُذَيْفَةُ وَأَبُو مَسْعُودٍ فَقَالَ حُذَيْفَةُ رَجُلٌ لَقِيَ رَبَّهُ فَقَالَ مَا عَمِلْتَ قَالَ مَا عَمِلْتُ مِنْ الْخَيْرِ إِلَّا أَنِّي كُنْتُ رَجُلًا ذَا مَالٍ فَكُنْتُ أُطَالِبُ بِهِ النَّاسَ فَكُنْتُ أَقْبَلُ الْمَيْسُورَ وَأَتَجَاوَزُ عَنْ الْمَعْسُورِ فَقَالَ تَجَاوَزُوا عَنْ عَبْدِي قَالَ أَبُو مَسْعُودٍ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்ட ஒருபோது ஹுதைஃபா (ரலி) கூறியதாவது: “ஒருவர் (இறந்த பின்) தம் இறைவனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இறைவன், “நீ (ஏதேனும்) நற்செயல் புரிந்திருக்கிறாயா?” என்று கேட்டான். அவர் “எந்த நல்லறமும் செய்யவில்லை. எனினும், நான் பொருளாதார வசதியுடையவனாக இருந்தேன். எனவே, (மக்களுக்குக் கடனாகக் கொடுத்த) பணத்தை (திருப்பித் தருமாறு) மக்களிடம் கேட்பேன். அப்போது (கடனாளியால்) கொடுக்க இயன்ற தொகையைப் பெற்றுக்கொள்வேன்; இயலாத தொகையைத் தள்ளுபடி செய்துவிடுவேன்” என்று கூறினார்.
அதற்கு இறைவன், “என் (இந்த) அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்” என்று நபி (ஸல்) கூறியதை ஹுதைஃபா (ரலி) எடுத்துரைத்தார்கள். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி), “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) வழியாக ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்)