அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 496

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏اغْتَسَلَ مِنْ جَنَابَةٍ صَبَّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ ‏ ‏حَفَنَاتٍ ‏ ‏مِنْ مَاءٍ فَقَالَ لَهُ ‏ ‏الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏إِنَّ شَعْرِي كَثِيرٌ قَالَ ‏ ‏جَابِرٌ ‏ ‏فَقُلْتُ لَهُ يَا ابْنَ أَخِي كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكْثَرَ مِنْ شَعْرِكَ وَأَطْيَبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸைச் செவிமடுத்த ஹசன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், “எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே?” என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியை விட அதிகமாகவும் அழகானதாகவும் இருக்கும் (அவர்களே மூன்று முறை தான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

Share this Hadith:

Leave a Comment