அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 446

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏
‏إِنْ كُنْتُ لَأَدْخُلُ الْبَيْتَ لِلْحَاجَةِ وَالْمَرِيضُ فِيهِ فَمَا أَسْأَلُ عَنْهُ إِلَّا وَأَنَا مَارَّةٌ وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فَأُرَجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا ‏
‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏إِذَا كَانُوا مُعْتَكِفِينَ ‏

நான் (இஃதிகாஃப் இருக்கும் போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குப் போவேன். வீட்டில் நோயுற்றவர்கள் இருப்பின், போகிற போக்கில் அப்படியே நலம் விசாரித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஃதிகாஃபில் இருந்தால்) பள்ளிவாசலில் இருந்து கொண்டு தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன். அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது, இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்கு வருவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் “… (மக்கள்) இஃதிகாஃபில் இருக்கும் போது, இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குச் செல்வர்” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment