حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ أَنَّ أُمَّ سُلَيْمٍ حَدَّثَتْ :
أَنَّهَا سَأَلَتْ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَتْ ذَلِكِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ وَاسْتَحْيَيْتُ مِنْ ذَلِكَ قَالَتْ وَهَلْ يَكُونُ هَذَا فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ
நான் நபி (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண், தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்(ணின் மீது குளியல் கடமையாகுமா? என்பது) பற்றி கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். (அவ்வாறு கேட்டு) அதற்காக நான் வெட்கப்பட்டேன். மேலும், “இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (குழந்தையில்) ஏற்படுகிறது? ஆணின் நீர்(விந்து) வெள்ளை நிறமானதும் கெட்டியானதுமாகும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் மிகைத்து விடுவது அல்லது முந்தி விடுவதன் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது” என்று விளக்கினார்கள்.
அறிவிப்பாளர் : உம்மு ஸுலைம் (ரலி)