அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3334

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ يَقُولُ :‏

كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الصُّلْحَ بَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبَيْنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْحُدَيْبِيَةِ فَكَتَبَ ‏”‏ هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ‏”‏ ‏.‏ فَقَالُوا لاَ تَكْتُبْ رَسُولُ اللَّهِ فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نُقَاتِلْكَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ ‏”‏ امْحُهُ ‏”‏ ‏.‏ فَقَالَ مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ ‏.‏ فَمَحَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ قَالَ وَكَانَ فِيمَا اشْتَرَطُوا أَنْ يَدْخُلُوا مَكَّةَ فَيُقِيمُوا بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلُهَا بِسِلاَحٍ إِلاَّ جُلُبَّانَ السِّلاَحِ ‏.‏ قُلْتُ لأَبِي إِسْحَاقَ وَمَا جُلُبَّانُ السِّلاَحِ قَالَ الْقِرَابُ وَمَا فِيهِ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الْحُدَيْبِيَةِ كَتَبَ عَلِيٌّ كِتَابًا بَيْنَهُمْ قَالَ فَكَتَبَ ‏”‏ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏”‏ ثُمَّ ذَكَرَ بِنَحْوِ حَدِيثِ مُعَاذٍ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ ‏”‏ هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ ‏”‏

நபி (ஸல்) அவர்களுக்கும் (குறைஷி) இணைவைப்பாளர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா நாளில் நடைபெற்ற சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை அலீ (ரலி) எழுதும்போது, “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதிக்கொண்டது …” என எழுத, இணைவைப்பாளர்கள், “அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என எழுதாதீர்கள்” (என்று கூறிவிட்டு நபியவர்களை நோக்கி), “நீர் அல்லாஹ்வின் தூதர் என நாங்கள் அறிந்திருந்தால் உம்முடன் போரிட்டிருக்கவே மாட்டோமே” என்று கூறினர்.

ஆகவே, நபி (ஸல்) (அலீ (ரலி) அவர்களிடம்), “அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி), “நான் அதை (ஒரு போதும்) அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களே தமது கரத்தால் அதை அழித்தார்கள்.

“முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்கா நகருக்குள் நுழைந்து மூன்று நாள்கள் மட்டும் தங்கியிருக்கலாம். நகருக்குள் எந்த ஆயுதத்தையும் உறையிலிட்டுத்தான் எடுத்துவர வேண்டும்” என இணைவைப்பாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்புகள் :

“நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் ‘ஜுலுப் பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?‘ என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்), ‘உறையும் அதிலுள்ள ஆயுதமும்‘  என்று பதிலளித்தார்கள்” என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுதைபிய்யாக்காரர்கள் (எனும் மக்கா குறைஷியருடன்)  ஹுதைபிய்யா எனுமிடத்தில் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டபோது, அலீ (ரலி) அவர்களுக்கிடையிலான உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று அவர்கள் எழுத…’ என ஆரம்பமாகிறது.

Share this Hadith: