அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3663

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ :‏

إِنِّي لَقَائِمٌ عَلَى الْحَىِّ عَلَى عُمُومَتِي أَسْقِيهِمْ مِنْ فَضِيخٍ لَهُمْ وَأَنَا أَصْغَرُهُمْ سِنًّا فَجَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّهَا قَدْ حُرِّمَتِ الْخَمْرُ فَقَالُوا اكْفَأْهَا يَا أَنَسُ ‏.‏ فَكَفَأْتُهَا ‏.‏ قَالَ قُلْتُ لأَنَسٍ مَا هُوَ قَالَ بُسْرٌ وَرُطَبٌ ‏.‏ قَالَ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ ‏.‏ قَالَ سُلَيْمَانُ وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ ذَلِكَ أَيْضًا ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ أَنَسٌ كُنْتُ قَائِمًا عَلَى الْحَىِّ أَسْقِيهِمْ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ ‏.‏ وَأَنَسٌ شَاهِدٌ فَلَمْ يُنْكِرْ أَنَسٌ ذَاكَ ‏.‏ وَقَالَ ابْنُ عَبْدِ الأَعْلَى حَدَّثَنَا الْمُعْتَمِرُ عَنْ أَبِيهِ قَالَ حَدَّثَنِي بَعْضُ مَنْ كَانَ مَعِي أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ‏.‏

நான் எங்கள் உறவினரிடையே என் தந்தையின் சகோதரர்களுக்கு, அவர்களுக்குரிய பேரீச்சங்காய் மதுவை நின்றுகொண்டு பரிமாறிக்கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ஒருவர் வந்து, “மது தடை செய்யப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார். உடனே என் தந்தையின் சகோதரர்கள், “அனஸே! இவற்றைக் கவிழ்த்துவிடு” என்று கூறினார்கள். அவ்வாறே நான் (மதுக் கலயங்களைக்) கவிழ்த்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அ(வர்களுடைய ம)து எ(த்தகைய)து?” என்று கேட்டேன். அதற்கு, “நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் செங்காய்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது அபூபக்ரு பின் அனஸ் (ரஹ்), “அக்காலத்தில் அதுதான் அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று (விளக்கிக்) கூறினார் என்று இதன் அறிவிப்பாளரான ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

“இவ்வாறு அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாக மற்றொருவர் எனக்கு அறிவித்தார்” என்றும் ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

அல் முஃதமர் பின் ஸுலைமான் (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பது, “நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்…” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

மேலும், அதில், அப்போது அபூபக்ரு பின் அனஸ் (ரஹ்), “அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ரு அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) மறுக்கவில்லை.

Share this Hadith:

Leave a Comment