அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3662

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَأَلُوا أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْفَضِيخِ، فَقَالَ :‏

مَا كَانَتْ لَنَا خَمْرٌ غَيْرَ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الْفَضِيخَ إِنِّي لَقَائِمٌ أَسْقِيهَا أَبَا طَلْحَةَ وَأَبَا أَيُّوبَ وَرِجَالاً مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِنَا إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ هَلْ بَلَغَكُمُ الْخَبَرُ قُلْنَا لاَ قَالَ فَإِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ فَقَالَ يَا أَنَسُ أَرِقْ هَذِهِ الْقِلاَلَ قَالَ فَمَا رَاجَعُوهَا وَلاَ سَأَلُوا عَنْهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ‏.‏

மக்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பேரீச்சங்காய் மது(வான ஃபளீக்) குறித்துக் கேட்டனர். அப்போது அனஸ் (ரலி) கூறினார்கள்: நீங்கள் ‘ஃபளீக்’ எனக் குறிப்பிடும் இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி (ஸல்) காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை.

நான் எங்கள் வீட்டில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் வேறுசிலருக்கும் மது பரிமாறுவதில் (ஒரு நாள்) ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து, “உங்களுக்குச் செய்தி (ஏதும்) எட்டியதா?“ என்று கேட்டார். நாங்கள் “இல்லை“ என்றோம். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது!” என்று தெரிவித்தார்.

அப்போது அபூதல்ஹா (ரலி), “அனஸே! இந்த மதுப் பீப்பாயைக் கீழே கொட்டி விடு“ என்று கூறினார்கள். அவர் (தடை) செய்தியைத் தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவைத் திரும்பிப் பார்க்கவில்லை. (உறுதி செய்துகொள்வதற்காக) மதுவைப் பற்றி (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment