அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3744

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ – قَالَ أَبُو بَكْرٍ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ سَهْلٍ، حَدَّثَنَا – ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ – أَخْبَرَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنَ الْعَرَبِ فَأَمَرَ أَبَا أُسَيْدٍ أَنْ يُرْسِلَ إِلَيْهَا فَأَرْسَلَ إِلَيْهَا فَقَدِمَتْ فَنَزَلَتْ فِي أُجُمِ بَنِي سَاعِدَةَ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَاءَهَا فَدَخَلَ عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ مُنَكِّسَةٌ رَأْسَهَا فَلَمَّا كَلَّمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ قَالَ ‏”‏ قَدْ أَعَذْتُكِ مِنِّي ‏”‏ ‏.‏ فَقَالُوا لَهَا أَتَدْرِينَ مَنْ هَذَا فَقَالَتْ لاَ ‏.‏ فَقَالُوا هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَكِ لِيَخْطُبَكِ قَالَتْ أَنَا كُنْتُ أَشْقَى مِنْ ذَلِكَ 

قَالَ سَهْلٌ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ حَتَّى جَلَسَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ هُوَ وَأَصْحَابُهُ ثُمَّ قَالَ ‏”‏ اسْقِنَا ‏”‏ ‏ لِسَهْلٍ قَالَ فَأَخْرَجْتُ لَهُمْ هَذَا الْقَدَحَ فَأَسْقَيْتُهُمْ فِيهِ 


قَالَ أَبُو حَازِمٍ فَأَخْرَجَ لَنَا سَهْلٌ ذَلِكَ الْقَدَحَ فَشَرِبْنَا فِيهِ قَالَ ثُمَّ اسْتَوْهَبَهُ بَعْدَ ذَلِكَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَوَهَبَهُ لَهُ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ قَالَ ‏”‏ اسْقِنَا يَا سَهْلُ ‏”‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரபுப் பெண் ஒருத்தியைப் பற்றி (அவளை மணந்து கொள்ளுமாறு) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணை அழைத்து வருவதற்கு ஆளனுப்புமாறு அபூஉஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் ஆளனுப்பினார்கள்.

அந்தப் பெண் வந்து, (மதீனாவிலுள்ள) பனூ ஸாஇதா குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டு அப்பெண்ணிடம் வந்து, அவள் இருந்த இடத்தில் நுழைந்தபோது, அப்பெண் தலையைக் கவிழ்த்தபடி இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், “உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்று சொன்னாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். மக்கள் அந்தப் பெண்ணிடம், “இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள் “தெரியாது“ என்று பதிலளித்தாள்.

மக்கள் “இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று கூறினர். அந்தப் பெண், “அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து, துர்பாக்கியசாலி ஆகிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறினாள்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் முன்னே சென்று பனூ ஸாஇதா சமுதாயக் கூடத்தில் அமர்ந்துகொண்டனர். பிறகு “எங்களுக்குக் குடிக்க நீர் கொடுங்கள்“ என்று என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காக இந்தக் குவளையை எடுத்துக்கொண்டு சென்று அதில் அவர்களுக்கு நீர் (கொண்டு வந்து) குடிக்கக் கொடுத்தேன்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்புகள் :

 அபூபக்ரு பின் இஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களுக்குக் குடிக்கத் நீர் கொடுங்கள், ஸஹ்லே!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

“பிற்றைய ஒரு நாளில் ஸஹ்லு (ரலி) அந்தக் குவளையை வெளியில் எடுத்தார்கள். அதில் நாங்களும் பருகினோம். பிறகு (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்டதால் ஸஹ்லு (ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஹாஸிம் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment