அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3925

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ مَوْلَى بَنِي النَّجَّارِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيِّ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَمَاثِيلُ ‏”‏


قَالَ فَأَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ إِنَّ هَذَا يُخْبِرُنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَمَاثِيلُ ‏”‏ ‏.‏ فَهَلْ سَمِعْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ ذَلِكَ فَقَالَتْ لاَ وَلَكِنْ سَأُحَدِّثُكُمْ مَا رَأَيْتُهُ فَعَلَ رَأَيْتُهُ خَرَجَ فِي غَزَاتِهِ فَأَخَذْتُ نَمَطًا فَسَتَرْتُهُ عَلَى الْبَابِ فَلَمَّا قَدِمَ فَرَأَى النَّمَطَ عَرَفْتُ الْكَرَاهِيَةَ فِي وَجْهِهِ فَجَذَبَهُ حَتَّى هَتَكَهُ أَوْ قَطَعَهُ وَقَالَ ‏”‏ إِنَّ اللَّهَ لَمْ يَأْمُرْنَا أَنْ نَكْسُوَ الْحِجَارَةَ وَالطِّينَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَقَطَعْنَا مِنْهُ وِسَادَتَيْنِ وَحَشَوْتُهُمَا لِيفًا فَلَمْ يَعِبْ ذَلِكَ عَلَىَّ

“நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன் என அபூதல்ஹா (ரலி) கூறினார்கள்.

ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இவர் (ஸைத் பின் காலித்), ‘நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள் என என்னிடம் கூறுகின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு கூறியதை நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), கூறினார்கள்: “இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஒரு செயல் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு நான் திரைச் சீலையொன்றை எடுத்து அதை (எனது வீட்டு) வாசலில் தொங்கவிட்டேன். அவர்கள் (போரை முடித்துத் திரும்பி) வந்தபோது அந்தத் திரைச் சீலையைப் பார்த்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேகமாக அதைப் பிடித்து இழுத்துக் கிழித்துவிட்டார்கள்.

மேலும், “கல்லுக்கும் களி மண்ணுக்கும் ஆடையணிவிக்குமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடவில்லை” என்று கூறினார்கள். ஆகவே, அந்தத் திரையைத் துண்டாக்கி, அவற்றில் பேரீச்ச நார்களை நிரப்பி, இரு தலையணைகள் செய்துகொண்டோம். அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment