حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ قَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْكَ السَّلَامُ ثُمَّ قَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا عَلِّمْنِي قَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ح و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةٍ وَسَاقَا الْحَدِيثَ بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَزَادَا فِيهِ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغْ الْوُضُوءَ ثُمَّ اسْتَقْبِلْ الْقِبْلَةَ فَكَبِّرْ
நபி (ஸல்) (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசர அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் ஸலாம் சொல்லிவிட்டு, “நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று சொன்னார்கள்.
அவர் திரும்பிப் போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுது விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதில் ஸலாம் சொல்லி விட்டு, “நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அவர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் தொழுகைக்கு நின்றதும் (‘அல்லாஹு அக்பர்’ என்று) தக்பீர் கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக் கொள்வீராக! பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலை கொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (ஸஜ்தாச்) செய்வீராக! அதில் சற்று நேரம் நிலை கொள்வீராக! பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
அபூ உஸாமா (ரஹ்), அப்துல்லாஹ் இபுனு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், மேற்காணும் நிகழ்வின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பள்ளியின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள் என்றும் “நீர் தொழ வேண்டும்போது, உளூச் செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறுவீராக!” என்று அவரிடம் கூறியதாகவும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.