حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ قَالَ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ وَهُوَ غَيْرُ كَذُوبٍ :
أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ لَمْ أَرَ أَحَدًا يَحْنِي ظَهْرَهُ حَتَّى يَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَبْهَتَهُ عَلَى الْأَرْضِ ثُمَّ يَخِرُّ مَنْ وَرَاءَهُ سُجَّدًا
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது வந்தோம். அவர்கள் ருகூஉச் செய்து தலையை உயர்த்திவிட்டால் அவர்கள் பூமியில் தமது நெற்றியை வைக்கும்வரை (எங்களில்) யாரும் தமது முதுகை (ஸஜ்தாச் செய்வதற்காக) வளைப்பதை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (அவர்கள் ஸஜ்தாச் செய்த) பிறகுதான் பின்னாலிருப்பவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
குறிப்பு :
“பொய் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) எனக்கு இதை அறிவித்தார்” என அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) குறிப்பிடுகிறார்.