அத்தியாயம்: 48, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4858

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا هَارُونُ الأَعْوَرُ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، عَنْ أَنَسٍ قَالَ :‏

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو بِهَؤُلاَءِ الدَّعَوَاتِ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْكَسَلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ‏”‏

நபி (ஸல்) “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வல்கஸலி, வ அர்தலில் உமுரி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” எனப் பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! கருமித்தனத்திலிருந்தும் சோம்பேறித்தனத்திலிருந்தும் தள்ளாத வயதிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்புவேளை சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: