அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 931

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏قَالَ

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏
‏قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلْأَوْزَاعِيِّ ‏ ‏كَيْفَ الْاسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) கோரிவிட்டு, “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ்ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “பாவமன்னிப்புக் கோருவது எவ்வாறு?” என்று கேட்டேன். அதற்கு, “அஸ்தஃக்ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்; நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவீராக!” என்றார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment