حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ :
أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ” أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ ” . قَالُوا بَلَى . قَالَ صلى الله عليه وسلم ” كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ” . ثُمَّ قَالَ ” أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ ” . قَالُوا بَلَى . قَالَ ” كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ”
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ “ أَلاَ أَدُلُّكُمْ ”
நபி (ஸல்), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?“ என்று (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்), “(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான்” என்று கூறியதையும்,
பிறகு “நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். “அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்” என்று நபியவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.
அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)
குறிப்பு :
முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?“ என்பதற்குப் பகரமாக “உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?“ என்று இடம்பெற்றுள்ளது.