حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَىِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلاَءِ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ ”
“பனூ கஅப் குலத்தாரின் தந்தையான அம்ரு பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப், தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அம்ரு என்பாருக்குச் சுருக்கமான இன்னொரு பெயர் ‘குஸாஆ‘ என்பதாகும். இவர்தாம் ‘ஹுபல்‘ எனும் சிலையை ஷாமிலிருந்து கொண்டுவந்து மக்காவில் நிறுவி, சிலை வணக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்தவர் என்று ‘தக்மிலா‘வில் குறிப்பிடப்பட்டுள்ளது.