அத்தியாயம்: 53, பாடம்: 13, ஹதீஸ் எண்: 5072

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ‏”‏

“நரகவாசிகளில் இரு பிரிவினர் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசுவின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி, குலுக்கி ஒயிலாக) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தைத்) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் (இரண்டாம் பிரிவினர்) ஆவர். அவர்களின் கொண்டை, கழுத்து நீண்ட ஒட்டகத்தின் சாயும் திமில்களைப் போன்று கூம்பாக இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் (மட்டுமல்ல); சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு … இவ்வளவு … தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும். அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஹதீஸ் எண் : 3962

Share this Hadith: