حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ قَالَ :
سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئْتُمْ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صلى الله عليه وسلم وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلأُ بِهِ بَطْنَهُ
وَقُتَيْبَةُ لَمْ يَذْكُرْ بِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْمُلاَئِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، كِلاَهُمَا عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ . نَحْوَهُ وَزَادَ فِي حَدِيثِ زُهَيْرٍ وَمَا تَرْضَوْنَ دُونَ أَلْوَانِ التَّمْرِ وَالزُّبْدِ
“(இன்று) நீங்கள் விரும்பும் உணவும் பானமும் உங்களிடம் இருக்கின்றன அல்லவா? ஆனால், உங்கள் நபி (ஸல்) அவர்களோ தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் இருந்ததை நான் கண்டுள்ளேன்” என்று நுஅமான் பின் பஷீர் (ரலி) சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)
குறிப்பு :
குதைபா (ரஹ்) அறிவிப்பில், ”(மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம்) அதுகூட கிடைக்காமல் .” என்று இடம்பெற்றுள்ளது.
ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆனால், நீங்களோ (இன்று) பல நிறப் பேரீச்சம் பழங்களுக்கும் வெண்ணெய்க்கும் குறைவானதைக் கொண்டு திருப்தி அடைவதில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.