அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5261

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ :‏

سَمِعْتُ النُّعْمَانَ يَخْطُبُ قَالَ ذَكَرَ عُمَرُ مَا أَصَابَ النَّاسُ مِنَ الدُّنْيَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَظَلُّ الْيَوْمَ يَلْتَوِي مَا يَجِدُ دَقَلاً يَمْلأُ بِهِ بَطْنَهُ

நுஅமான் பின் பஷீர் (ரலி) உரையாற்றுகையில் கூறினார்கள்:

உமர் (ரலி), மக்களுக்கு(த் தற்போது) ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவுகூர்ந்தார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டு கிடந்ததை நான் கண்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)

Share this Hadith: