அத்தியாயம்: 56, பாடம்: 6, ஹதீஸ் எண்: 5332

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏ ‏

سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ فَإِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثٌ أَيُّهَا النَّاسُ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْنَا فِيهِنَّ عَهْدًا نَنْتَهِي إِلَيْهِ الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا ‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنْ أَبِي حَيَّانَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا غَيْرَ أَنَّ ابْنَ عُلَيَّةَ فِي حَدِيثِهِ الْعِنَبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ إِدْرِيسَ وَفِي حَدِيثِ عِيسَى الزَّبِيبِ ‏.‏ كَمَا قَالَ ابْنُ مُسْهِرٍ ‏

(என் தந்தை, கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மிம்பர் மீதிருந்தபடி பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்:

இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுபானத் தடை(ச் சட்டம் நடைமுறைக்கு) வந்தது. திராட்சைப் பழம், பேரீச்சம் பழம், தேன், தொலி நீக்கப்பட்ட கோதுமை (பார்லி), தொலி நீக்கப்படாத கோதுமை ஆகியவையே அப்பொருட்களாகும். (இவையன்றி) அறிவுக்குத் திரையிடக்கூடிய அனைத்தும் மதுவாகும்.

மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்திருந்தால், நாம் தெளிவு பெற்றிருப்போம் என்று நான் விரும்பியதுண்டு. அவை:

  1. பாட்டனார். (அதாவது ஒருவருடைய சொத்தில் அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு?)
  2. ’கலாலா’ (என்றால் என்ன?)
  3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்

அறிவிப்பாளர் : – அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்புகள் :

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) வழி அறிவிப்பில், மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று (மது தயாரிக்கப்படும் பொருட்களில் ஒன்றாக) ’திராட்சை’ என்பது இடம்பெற்றுள்ளது;.

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளதைப் போன்று ’உலர்ந்த திராட்சை’ என்று காணப்படுகிறது.

Share this Hadith: