அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1150

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَامِرُ بْنُ وَاثِلَةَ أَبُو الطُّفَيْلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ جَبَلٍ ‏ ‏قَالَ ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَبَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏

قَالَ ‏ ‏فَقُلْتُ مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ قَالَ فَقَالَ أَرَادَ أَنْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தபூக் போரின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து(ப் பகலின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து (இரவின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஆத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள்” என விடையளித்தார்கள் என்று ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment