அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1151

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ ‏

فِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَيْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قِيلَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (போர்க்கால) அச்சமோ மழையோ இல்லாத சூழலில், லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள்” என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment