حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ عَنْ أَبِيهِ عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ قَالَ قَالَ أَبُو وَائِلٍ خَطَبَنَا عَمَّارٌ فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا أَبَا الْيَقْظَانِ لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ فَقَالَ :
إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ الْبَيَانِ سِحْرًا
எங்களுக்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) செறிவுடன் சுருக்கமாக (வெள்ளிக்கிழமை ஒன்றில்) உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, “அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாக உரை நிகழ்த்தினீர்கள். இன்னும் சிறிது நீட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் வினவினோம். அதற்கு அவர்கள், “தொழுகையை நீட்டி, உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளமாகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் வசியம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி) வழியாக அபூவாயில் (ரஹ்)