அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3159

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، يَقُولُ حَدَّثَنِي أَبُو لَيْلَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْلٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ رِجَالٍ مِنْ كُبَرَاءِ قَوْمِهِ:‏

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ وَمُحَيِّصَةَ خَرَجَا إِلَى خَيْبَرَ مِنْ جَهْدٍ أَصَابَهُمْ فَأَتَى مُحَيِّصَةُ فَأَخْبَرَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَدْ قُتِلَ وَطُرِحَ فِي عَيْنٍ أَوْ فَقِيرٍ فَأَتَى يَهُودَ فَقَالَ أَنْتُمْ وَاللَّهِ قَتَلْتُمُوهُ ‏.‏ قَالُوا وَاللَّهِ مَا قَتَلْنَاهُ ‏.‏ ثُمَّ أَقْبَلَ حَتَّى قَدِمَ عَلَى قَوْمِهِ فَذَكَرَ لَهُمْ ذَلِكَ ثُمَّ أَقْبَلَ هُوَ وَأَخُوهُ حُوَيِّصَةُ وَهُوَ أَكْبَرُ مِنْهُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ فَذَهَبَ مُحَيِّصَةُ لِيَتَكَلَّمَ وَهُوَ الَّذِي كَانَ بِخَيْبَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمُحَيِّصَةَ ‏”‏كَبِّرْ كَبِّرْ‏”‏ ‏.‏ يُرِيدُ السِّنَّ فَتَكَلَّمَ حُوَيِّصَةُ ثُمَّ تَكَلَّمَ مُحَيِّصَةُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏إِمَّا أَنْ يَدُوا صَاحِبَكُمْ وَإِمَّا أَنْ يُؤْذِنُوا بِحَرْبٍ‏”‏ ‏.‏ فَكَتَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْهِمْ فِي ذَلِكَ فَكَتَبُوا إِنَّا وَاللَّهِ مَا قَتَلْنَاهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحُوَيِّصَةَ وَمُحَيِّصَةَ وَعَبْدِ الرَّحْمَنِ ‏”أَتَحْلِفُونَ وَتَسْتَحِقُّونَ دَمَ صَاحِبِكُمْ‏”‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏”فَتَحْلِفُ لَكُمْ يَهُودُ‏”‏ ‏.‏ قَالُوا لَيْسُوا بِمُسْلِمِينَ ‏.‏ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ فَبَعَثَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِائَةَ نَاقَةٍ حَتَّى أُدْخِلَتْ عَلَيْهِمُ الدَّارَ ‏.‏ فَقَالَ سَهْلٌ فَلَقَدْ رَكَضَتْنِي مِنْهَا نَاقَةٌ حَمْرَاءُ ‏.‏


حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا وَقَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الأَنْصَارِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقَرَّ الْقَسَامَةَ عَلَى مَا كَانَتْ عَلَيْهِ فِي الْجَاهِلِيَّةِ ‏.‏

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏ وَزَادَ وَقَضَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ نَاسٍ مِنَ الأَنْصَارِ فِي قَتِيلٍ ادَّعَوْهُ عَلَى الْيَهُودِ ‏.‏

وَحَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ، أَخْبَرَاهُ عَنْ نَاسٍ، مِنَ الأَنْصَارِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ ‏.‏

அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் முஹய்யிஸா (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபருக்குப் புறப்பட்டார்கள்.

பின்னர், ”அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டு, ஒரு நீர் நிலையில் அல்லது குழியில் கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள் என்று நான் கூறினேன். யூதர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை என்று கூறினர்” என்று முஹய்யிஸா (ரலி) வந்து தெரிவித்தார்கள்.

பிறகு முஹய்யிஸா (ரலி) தம் குலத்தாரிடமும் அதைப் பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் (நபியவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ்வுடன் இருந்த முஹய்யிஸா (ரலி) (முந்திக்கொண்டு) பேச ஆரம்பித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், “வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு” என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா (ரலி) பேசினார்கள். பிறகு முஹய்யிஸா பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(யூதர்கள் கொலை செய்தார்கள் என்பது நிரூபணமானால்,) அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான பழியீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடனான சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!” என்று கூறினார்கள்.

பிறகு இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை” எனப் பதில் எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அகியோரிடம், “யூதர்கள்தாம் (அப்துல்லாஹ் பின் ஸஹ்லுவைக்) கொலை செய்தார்கள் என்று சத்தியம் செய்து, நீங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மூவரும் “இல்லை” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள் சத்தியம் செய்வர்” என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், “அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட தயங்கமாட்டார்கள்)” என்று கூறினர்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே அப்துல்லாஹ் பின் ஸஹ்லு அவர்களின் கொலைக்கான பழியீட்டைக் கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.

அறிவிப்பாளர் : . ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)


குறிப்புகள் :

“அந்த ஒட்டகங்களில் ஒரு சிவப்பு ஒட்டகம் தனது காலால் என்னை உதைத்து விட்டது” என்று ஸஹ்லு (ரலி) கூறுகிறார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறியாமைக் காலத்தில் இருந்துவந்த அல்கஸாமா சத்திய முறையை நீடிக்கச் செய்தார்கள்” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அறிவிக்கின்றார்.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகளில் சிலர், தங்களில் ஒருவரை யூதர்கள் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியபோது இவ்வாறே (சத்தியம் செய்யுமாறு) தீர்ப்பளித்தார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3158

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ:‏

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلِ بْنِ زَيْدٍ، وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيَّيْنِ، ثُمَّ مِنْ بَنِي حَارِثَةَ خَرَجَا إِلَى خَيْبَرَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ يَوْمَئِذٍ صُلْحٌ وَأَهْلُهَا يَهُودُ فَتَفَرَّقَا لِحَاجَتِهِمَا فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ فَوُجِدَ فِي شَرَبَةٍ مَقْتُولاً فَدَفَنَهُ صَاحِبُهُ ثُمَّ أَقْبَلَ إِلَى الْمَدِينَةِ فَمَشَى أَخُو الْمَقْتُولِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ وَحُوَيِّصَةُ فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَأْنَ عَبْدِ اللَّهِ وَحَيْثُ قُتِلَ فَزَعَمَ بُشَيْرٌ وَهُوَ يُحَدِّثُ عَمَّنْ أَدْرَكَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لَهُمْ ‏”تَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا وَتَسْتَحِقُّونَ قَاتِلَكُمْ‏”‏ أَوْ ‏”‏صَاحِبَكُمْ‏”‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا شَهِدْنَا وَلاَ حَضَرْنَا ‏‏ فَزَعَمَ أَنَّهُ قَالَ ‏”فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ‏”‏ ‏‏ فَقَالُوا “يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ” فَزَعَمَ بُشَيْرٌ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَقَلَهُ مِنْ عِنْدِهِ ‏.‏


وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ مِنْ بَنِي حَارِثَةَ يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ انْطَلَقَ هُوَ وَابْنُ عَمٍّ لَهُ يُقَالُ لَهُ مُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ اللَّيْثِ إِلَى قَوْلِهِ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ ‏.‏ قَالَ يَحْيَى فَحَدَّثَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ قَالَ أَخْبَرَنِي سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ قَالَ لَقَدْ رَكَضَتْنِي فَرِيضَةٌ مِنْ تِلْكَ الْفَرَائِضِ بِالْمِرْبَدِ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا بُشَيْرُ بْنُ يَسَارٍ الأَنْصَارِيُّ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ نَفَرًا مِنْهُمُ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلاً ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُبْطِلَ دَمَهُ فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அன்ஸாரிகள் என்றும் பின்னர் பனூ ஹாரிஸா குலத்தார் என்றும் அறியப்பட்டவர்களான அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபருக்குப் புறப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் கைபர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பகுதியாயிருந்தது. யூதர்களே அங்கு வசித்துவந்தார்கள். (அங்குச் சென்றதும்) அவர்கள் இருவரும் தம் இயற்கைத் தேவைக்காகப் பிரிந்துசென்றனர்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டு (அத்தோட்டத்திலுள்ள) ஒரு தண்ணீர் தொட்டியில் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) கண்டார்கள். உடனே முஹய்யிஸா (ரலி) அவரை (எடுத்து) அடக்கம் செய்துவிட்டு, மதீனாவுக்கு வந்தார்கள். கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் (உறவினர்களான) முஹய்யிஸா (ரலி) மற்றும் ஹுவய்யிஸா (ரலி) ஆகியோரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்துல்லாஹ் (ரலி) அவர்களைப் பற்றியும் அவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஐம்பது பேர்  (அப்துல்லாஹ்வை இன்னவர் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து, நீங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு) பெறும் உரிமையை அல்லது உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை எடுத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நிகழ்வு நடந்த இடத்தில் நாங்கள் இருக்கவுமில்லை; அதைப் பார்க்கவும் இல்லையே!” என்று கேட்டார்கள்.

“அப்படியானால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிப்பார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?” என்று கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே அப்துல்லாஹ்வின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர் : புஷைர் பின் யஸார் (ரஹ்)


குறிப்புகள் :

ஹுஷைம் (ரஹ்) வழி அறிவிப்பு, “அன்ஸாரிகளில் பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) எனக் கூறப்படும் ஒருவரும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் எனக் கூறப்படும் அவருடைய தந்தையின் சகோதரர் ஒருவரும் (கைபருக்குச்) சென்றார்கள் …” என்று ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்று, “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே கொல்லப்பட்டவருக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்” என்பதுவரை இடம்பெற்றுள்ளது.

“பழியீட்டுத் தொகைக்காக வழங்கப்பட்ட ஒட்டகங்களில் ஒன்று, ஒட்டகத் தொழுவத்தில் வைத்து என்னை உதைத்துவிட்டது” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) கூறியதாக யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில் (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.

ஸயீத் பின் உபைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களில் சிலர் கைபருக்குச் சென்றபோது, அங்கு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள் …” என்றும் மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல், தாமே நூறு தர்ம ஒட்டகங்களை பழியீட்டுத் தொகைக்காக வழங்கினார்கள்” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா அல் அன்ஸாரீ (ரலி) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது

அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3157

وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ:‏

أَنَّ مُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ انْطَلَقَا قِبَلَ خَيْبَرَ فَتَفَرَّقَا فِي النَّخْلِ فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ فَاتَّهَمُوا الْيَهُودَ فَجَاءَ أَخُوهُ عَبْدُ الرَّحْمَنِ وَابْنَا عَمِّهِ حُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فِي أَمْرِ أَخِيهِ وَهُوَ أَصْغَرُ مِنْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏”‏‏كَبِّرِ الْكُبْرَ – أَوْ قَالَ – لِيَبْدَإِ الأَكْبَرُ‏”‏‏ ‏ فَتَكَلَّمَا فِي أَمْرِ صَاحِبِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏‏يُقْسِمُ خَمْسُونَ مِنْكُمْ عَلَى رَجُلٍ مِنْهُمْ فَيُدْفَعُ بِرُمَّتِهِ‏”‏‏‏ قَالُوا أَمْرٌ لَمْ نَشْهَدْهُ كَيْفَ نَحْلِفُ قَالَ ‏”‏‏فَتُبْرِئُكُمْ يَهُودُ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْهُمْ‏”‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَوْمٌ كُفَّارٌ قَالَ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ قِبَلِهِ


قَالَ سَهْلٌ فَدَخَلْتُ مِرْبَدًا لَهُمْ يَوْمًا فَرَكَضَتْنِي نَاقَةٌ مِنْ تِلْكَ الإِبِلِ رَكْضَةً بِرِجْلِهَا ‏.‏ قَالَ حَمَّادٌ هَذَا أَوْ نَحْوَهُ ‏

‏وَحَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ نَحْوَهُ ‏.‏ وَقَالَ فِي حَدِيثِهِ فَعَقَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ ‏.‏ وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ فَرَكَضَتْنِي نَاقَةٌ ‏.‏

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي الثَّقَفِيَّ – جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ بِنَحْوِ حَدِيثِهِمْ ‏.‏

முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் கைபருக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந் தோட்டப் பகுதியில் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டார்கள். யூதர்கள்மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஆகவே, அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் மக்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) “பெரியவர்களைப் பேசவிடு / வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்” என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஐம்பது பேர் கொலை செய்த யூதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் (உங்களிடம்) ஒப்படைக்கப்படுவான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நிகழ்வு நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “அப்படியென்றால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத்தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங்களை நாம் எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்), தாமே அப்துல்லாஹ் பின் ஸஹ்லு அவர்களின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள்

“பிற்பாடு ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) பழியீட்டுத் தொகைக்காக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) கூறினார்கள்.

“இவ்வாறு அல்லது இதைப் போன்று ஸஹ்லு (ரலி) கூறினார்கள்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) கூறுகின்றார்.

அல்கவாரீரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்” என இடம்பெற்றுள்ளது. “ஒட்டகம் என்னை உதைத்துவிட்டது” எனும் குறிப்பு அதில் இல்லை.

அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3156

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، – وَهُوَ ابْنُ سَعِيدٍ – عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ – قَالَ يَحْيَى وَحَسِبْتُ قَالَ – وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُمَا قَالاَ:‏

خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلِ بْنِ زَيْدٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ حَتَّى إِذَا كَانَا بِخَيْبَرَ تَفَرَّقَا فِي بَعْضِ مَا هُنَالِكَ ثُمَّ إِذَا مُحَيِّصَةُ يَجِدُ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ قَتِيلاً فَدَفَنَهُ ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ وَحُوَيِّصَةُ بْنُ مَسْعُودٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ قَبْلَ صَاحِبَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”كَبِّر‏”‏ ‏.‏ الْكُبْرَ فِي السِّنِّ فَصَمَتَ فَتَكَلَّمَ صَاحِبَاهُ وَتَكَلَّمَ مَعَهُمَا فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَقْتَلَ عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ فَقَالَ لَهُمْ ‏”أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا فَتَسْتَحِقُّونَ صَاحِبَكُمْ‏”‏ ‏ أَوْ ‏”قَاتِلَكُمْ‏”‏ ‏‏ قَالُوا وَكَيْفَ نَحْلِفُ وَلَمْ نَشْهَدْ قَالَ ‏”‏فَتُبْرِئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا‏”‏ قَالُوا وَكَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى عَقْلَهُ ‏.‏

அப்துல்லாஹ் பின் ஸஹ்லு பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) பயணம் சென்றபோது, கைபரில் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் (அவருடைய சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) வயதில் சிறியவராக இருந்தார். அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) தம்முடன் வந்த(வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச முனைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பெரியவர்களைப் பேசவிடு” என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசினார்கள்.

அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அப்துல்லாஹ் பின் ஸஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் (உயிரிழந்த) உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை, அல்லது உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை எடுத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “நாங்கள் (கொலை நடந்த இடத்தில்)  இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (‘நாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை’ என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?” என்று கேட்டார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தாமே அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) & ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)