அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1485

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏بَيْنَمَا ‏ ‏الْحَبَشَةُ ‏ ‏يَلْعَبُونَ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحِرَابِهِمْ إِذْ دَخَلَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏فَأَهْوَى ‏ ‏إِلَى ‏ ‏الْحَصْبَاءِ ‏ ‏يَحْصِبُهُمْ ‏ ‏بِهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعْهُمْ يَا ‏ ‏عُمَرُ

அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் ஈட்டியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அங்கு வந்து, அவர்கள்மீது எறிவதற்காகக் குனிந்து சிறு கற்களை எடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களை விட்டுவிடுங்கள், உமரே! (விளையாடட்டும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1484

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَاصِمٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُقْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ بْنُ عُمَيْرٍ ‏ ‏أَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏

‏أَنَّهَا قَالَتْ لِلَعَّابِينَ وَدِدْتُ أَنِّي ‏ ‏أَرَاهُمْ قَالَتْ ‏ ‏فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقُمْتُ عَلَى الْبَابِ أَنْظُرُ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ ‏

‏قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فُرْسٌ ‏ ‏أَوْ ‏ ‏حَبَشٌ ‏ ‏قَالَ وَقَالَ لِي ‏ ‏ابْنُ عَتِيقٍ ‏ ‏بَلْ ‏ ‏حَبَشٌ

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அந்த விளையாட்டு வீரர்களின் விளையாட்டைப் பார்க்க விரும்புவதாகக் கூறி(அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விளையாட்டைப் பார்த்துக் கொண்டு) நின்றார்கள்.

நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்கும் இடையே (எனது முகத்தை வைத்து) அந்த வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்:

“(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்களாக இருக்கக் கூடும்” என்று நான் சொன்னேன். ஆனால் இபுனு அதீக் (ரஹ்), “அல்ல; அவர்கள் அபிசீனியர்கள்தாம்” எனச் சொன்னார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அதாஉ (ரஹ்) கூறுகிறார்.

அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1483

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏جَاءَ ‏ ‏حَبَشٌ ‏ ‏يَزْفِنُونَ ‏ ‏فِي يَوْمِ عِيدٍ فِي الْمَسْجِدِ فَدَعَانِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَضَعْتُ رَأْسِي عَلَى ‏ ‏مَنْكِبِهِ ‏ ‏فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ حَتَّى كُنْتُ أَنَا الَّتِي أَنْصَرِفُ عَنْ النَّظَرِ إِلَيْهِمْ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرَا فِي الْمَسْجِدِ

ஒரு பெருநாள் தினத்தில் அபிசீனியர்கள் (ஆயுதங்களை வைத்து) குதித்து விளையாடிக் கொண்டு பள்ளி(வளாகத்து)க்கு வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் (வந்து) எனது தலையை நபி (ஸல்) அவர்களது தோள்மீது வைத்துக் கொண்டு அபிசீனியர்களின் விளையாட்டுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். இறுதியில் அவர்களை வேடிக்கை பார்ப்பதை நானாகவே முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்:

இபுனு நுமைர் (ரஹ்) & முஹம்மதிப்னு பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் “பள்ளி(வளாகத்து)க்கு” எனும் சொல் இடம்பெறவில்லை.

அக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1482

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعِنْدِي ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَانْتَهَرَنِي ‏ ‏وَقَالَ ‏ ‏مِزْمَارُ ‏ ‏الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏دَعْهُمَا فَلَمَّا غَفَلَ ‏ ‏غَمَزْتُهُمَا ‏ ‏فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ ‏ ‏السُّودَانُ ‏ ‏بِالدَّرَقِ ‏ ‏وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ ‏ ‏فَأَقَامَنِي ‏ ‏وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا ‏ ‏بَنِي أَرْفِدَةَ ‏ ‏حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: “என்னருகில் இரு சிறுமியர் ‘புஆஸ்’ போர் பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) வந்து என்னை அதட்டி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரை ஏறிட்டு நோக்கி, “அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அபூபக்ரு (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் நான் குறிப்பால் உணர்த்தி(வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறி விட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது.

சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டேனோ; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீர விளையாட்டுகளை) விரும்புகிறாயா?” என்று கேட்டார்களோ, நான், “ஆம்“ என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக் கொண்டார்கள். “அர்ஃபிதாவின் (சூடானிய) மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்படைந்தபோது, “போதுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, நான் “ஆம் (போதும்)” என்று சொன்னேன். “அப்படியானால் நீ போகலாம்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1481

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏

‏وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي ‏ ‏وَالْحَبَشَةُ ‏ ‏يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي ‏ ‏مَسْجِدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَيْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ فَاقْدِرُوا قَدْرَ ‏ ‏الْجَارِيَةِ ‏ ‏الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ

“அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது அறை வாசலில் நின்றபடி தமது மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1480

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا ‏ ‏جَارِيَتَانِ فِي أَيَّامِ ‏ ‏مِنًى ‏ ‏تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسَجًّى بِثَوْبِهِ ‏ ‏فَانْتَهَرَهُمَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَشَفَ رَسُولُ اللَّهِ عَنْهُ وَقَالَ ‏ ‏دَعْهُمَا يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ ‏ ‏الْجَارِيَةِ ‏ ‏الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ

‘மினா’வின் நாட்கள் ஒன்றில் என்னருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் துஃப் (எனும் கஞ்சிராக்களை) அடித்துப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ரு (ரலி) அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மீதிருந்த) துணியை விலக்கி, “அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருக்க, (பள்ளிவாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி வேடிக்கை) பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1479

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ عَلَيَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعِنْدِي ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏مِنْ جَوَارِي ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏تُغَنِّيَانِ بِمَا ‏ ‏تَقَاوَلَتْ ‏ ‏بِهِ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏يَوْمَ ‏ ‏بُعَاثَ ‏ ‏قَالَتْ وَلَيْسَتَا ‏ ‏بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏أَبِمَزْمُورِ ‏ ‏الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِيهِ ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏تَلْعَبَانِ بِدُفٍّ

‘புஆஸ்’ எனும் (அறியாமைக் காலத்தில் நடந்த ஒரு) போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை, பாடகியரல்லாத இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்து, “இறைத்தூதர் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூபக்ரே! (விடுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு சிறுமியர் துஃப் எனும் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.