அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2113

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ ‏ ‏وَأَهَلَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَأَمَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ ‏ ‏فَحَلَّ ‏ ‏وَأَمَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحِلُّوا حَتَّى كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ

நாங்கள், ‘விடைபெறும் ஹஜ்’ ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) முஹ்ரிம் ஆகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிம் ஆகியிருந்தனர்; இன்னும் சிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிம் ஆகியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி இருந்தார்கள். உம்ராவிற்கு மட்டும் முஹ்ரிமானவர்கள் (உம்ராவை முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொண்டார்கள். ஹஜ்ஜுக்கு மட்டுமே முஹ்ரிமானவர்களும் அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து முஹ்ரிமானவர்களும் ‘நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாள்’ வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2112

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ فَلَوْلَا أَنِّي أَهْدَيْتُ لَأَهْلَلْتُ بِعُمْرَةٍ قَالَتْ فَكَانَ مِنْ الْقَوْمِ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِالْحَجِّ قَالَتْ فَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَخَرَجْنَا حَتَّى قَدِمْنَا ‏ ‏مَكَّةَ ‏ ‏فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ لَمْ أَحِلَّ مِنْ عُمْرَتِي فَشَكَوْتُ ذَلِكَ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ دَعِي عُمْرَتَكِ ‏ ‏وَانْقُضِي رَأْسَكِ ‏ ‏وَامْتَشِطِي وَأَهِلِّي بِالْحَجِّ قَالَتْ فَفَعَلْتُ فَلَمَّا كَانَتْ ‏ ‏لَيْلَةُ الْحَصْبَةِ ‏ ‏وَقَدْ ‏ ‏قَضَى ‏ ‏اللَّهُ حَجَّنَا أَرْسَلَ مَعِي ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَرْدَفَنِي وَخَرَجَ بِي إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ فَقَضَى اللَّهُ حَجَّنَا وَعُمْرَتَنَا وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ ‏ ‏هَدْيٌ ‏ ‏وَلَا صَدَقَةٌ وَلَا صَوْمٌ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏خَرَجْنَا مُوَافِينَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِهِلَالِ ذِي الْحِجَّةِ لَا نَرَى إِلَّا الْحَجَّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدَةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ مِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ فَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِعُمْرَةٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمَا ‏ ‏و قَالَ ‏ ‏فِيهِ قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فِي ذَلِكَ إِنَّهُ قَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ ‏ ‏هَدْيٌ ‏ ‏وَلَا صِيَامٌ وَلَا صَدَقَةٌ

நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘விடைபெறும் ஹஜ்’ஜுக்காகப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் உம்ராவிற்காக முஹ்ரிமாக விரும்புகின்றவர், உம்ராவிற்கு முஹ்ரிம் ஆகட்டும்; நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால் நானும் உம்ராவிற்காகவே முஹ்ரிம் ஆகியிருப்பேன்” என்று சொன்னார்கள். எனவே, மக்களில் சிலர் உம்ராவிற்காக முஹ்ரிமாகியிருந்தனர். வேறுசிலர் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகியிருந்தனர். நான் உம்ராவிற்காக முஹ்ரிமானவர்களில் ஒருத்தியாக இருந்தேன்.

நாங்கள் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும் அரஃபா நாளில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானோ எனது உம்ராவின் செயற்பாடுகளைச் செய்து இஹ்ராம் நிலையிலிருந்து விடுபட்டிருக்க வில்லை. எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.

அப்போது நபி (ஸல்), “நீ உனது உம்ராவை விட்டுவிட்டு, உனது தலைமுடியை அவிழ்த்து, அதை வாரிக்கொண்டு ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகிக்கொள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். அல்லாஹ் எங்கள் ஹஜ்ஜை நிறைவேறச் செய்த பின்னர், ‘ஹஸ்பாவின் இரவில்‘ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு ‘தன்யீம்’ நோக்கிச் சென்றார். அங்கிருந்து நான் உம்ராவிற்காகத் ‘தல்பியா’ கூறினேன். இவ்வாறாக, அல்லாஹ் எங்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்: “இந்த (முன் – பின்) செயலுக்காகப் பலியிடலோ தர்மமோ நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் (ஹஜ் மாதத்தில் உம்ராச் செய்யக் கூடாது என்று எண்ணியிருந்ததால்) ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் உம்ராவிற்காகத் தல்பியாக் கூற விரும்புகின்றவர், உம்ராவிற்கு முஹ்ரிமாகிக்கொள்ளட்டும் …” என்று கூறினார்கள் எனத் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் துல்ஹஜ் மாதப் பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) முஹ்ரிமாகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) முஹ்ரிமாகியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாகியிருந்தனர். நான் உம்ராவிற்காக முஹ்ரிமானவர்களில் ஒருத்தியாக இருந்தேன் ..” என்று துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், “ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித் தந்தான்” என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் “இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை” என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

மக்கா-மினா வழியிலுள்ள ஓரிடத்தின் பெயர் ‘அல்முஹ்ஸப்’ என்பதாகும். மினாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பும் ஹாஜிகள் இரவுப் பொழுதில் இங்குத் தங்குவர். அந்த இரவுக்குப் பெயர் ‘ஹஸ்பாவின் இரவு’ என்பதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2111

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَأَهَلَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحَجٍّ وَأَهَلَّ بِهِ نَاسٌ مَعَهُ وَأَهَلَّ نَاسٌ بِالْعُمْرَةِ وَالْحَجِّ وَأَهَلَّ نَاسٌ بِعُمْرَةٍ وَكُنْتُ فِيمَنْ أَهَلَّ بِالْعُمْرَةِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது, “உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) முஹ்ரிமாக விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் பூண்டு, ‘தல்பியா’ கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் இஹ்ராம் பூண்டு முஹ்ரிமாயினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் பூண்டு முஹ்ரிமாயினர்.

நான் உம்ராவிற்காக மட்டும் முஹ்ரிமானவர்களுள் ஒருத்தியாக இருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2105

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو أَيُّوبَ الْغَيْلَانِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ خِرَاشٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحٌ وَهُوَ ابْنُ أَبِي مَعْروفٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لِضُبَاعَةَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏إِسْحَقَ ‏ ‏أَمَرَ ‏ ‏ضُبَاعَةَ

நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையுடன், ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு : இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்), ளுபாஆ (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) உத்தரவிட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2103

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏وَأَبُو عَاصِمٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏طَاوُسًا ‏ ‏وَعِكْرِمَةَ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ ‏ ‏ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ ثَقِيلَةٌ وَإِنِّي أُرِيدُ الْحَجَّ فَمَا تَأْمُرُنِي قَالَ ‏ ‏أَهِلِّي بِالْحَجِّ وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏تَحْبِسُنِي ‏ ‏قَالَ ‏ ‏فَأَدْرَكَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) வந்து, “எனக்கு (நோய் ஏற்பட்டு) உடல் கனத்துவிட்டது. நான் ஹஜ் செய்ய விரும்புகின்றேன். தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக தல்பியாக் கூறி, ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

எனினும் ளுபாஆ (ரலி) (தடையின்றி) ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2102

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْحَجَّ وَأَنَا ‏ ‏شَاكِيَةٌ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்), ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்), “நீ முன் நிபந்தனையிட்டு ‘(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயல்களைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.15, ஹதீஸ் எண்: 2101

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ لَهَا أَرَدْتِ الْحَجَّ قَالَتْ وَاللَّهِ مَا أَجِدُنِي إِلَّا وَجِعَةً فَقَالَ لَهَا ‏ ‏حُجِّي وَاشْتَرِطِي وَقُولِي ‏ ‏اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ ‏ ‏حَبَسْتَنِي ‏ ‏وَكَانَتْ تَحْتَ ‏ ‏الْمِقْدَادِ

ளுபாஆ பின்த்தி அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாக இருக்கிறேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரிடம், “நீ ஹஜ்ஜுக்காக முன் நிபந்தனையிட்டு, ‘இறைவா, நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜுக் கடமை செயற்பாடுகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று கூறிவிடு!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : ளுபாஆ (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவி ஆவார்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2021

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَلِيٍّ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏صَفْوَانُ بْنُ يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏بِهَا أَثَرٌ مِنْ ‏ ‏خَلُوقٍ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ فَكَيْفَ أَفْعَلُ فَسَكَتَ عَنْهُ فَلَمْ يَرْجِعْ إِلَيْهِ وَكَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَسْتُرُهُ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ يُظِلُّهُ فَقُلْتُ ‏ ‏لِعُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏إِنِّي أُحِبُّ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ أَنْ أُدْخِلَ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَلَمَّا أُنْزِلَ عَلَيْهِ ‏ ‏خَمَّرَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِالثَّوْبِ فَجِئْتُهُ فَأَدْخَلْتُ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ فَلَمَّا ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ قَالَ أَيْنَ السَّائِلُ آنِفًا عَنْ الْعُمْرَةِ فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ ‏ ‏انْزِعْ عَنْكَ جُبَّتَكَ وَاغْسِلْ أَثَرَ ‏ ‏الْخَلُوقِ ‏ ‏الَّذِي بِكَ وَافْعَلْ فِي عُمْرَتِكَ مَا كُنْتَ فَاعِلًا فِي حَجِّكَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, மேலங்கி அணிந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டுவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்), பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ, பலருக்கு மத்தியில்) அருளப் பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெறும்போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்றது, உமர் (ரலி) துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து நோக்கினேன். நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீயின்போது ஏற்படும் சிரம நிலை அவர்களைவிட்டு) விலகியபோது, “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள்.

உடனே அவர்களிடம் அந்த மனிதர் (வந்து) நின்றார். அப்போது நபி (ஸல்), “உமது அங்கியைக் களைந்து கொள்க; உம்மீதுள்ள நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிக் கொள்க. நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2020

و حَدَّثَنَا ‏ ‏عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏قَدْ ‏ ‏أَهَلَّ بِالْعُمْرَةِ ‏ ‏وَهُوَ مُصَفِّرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ وَأَنَا كَمَا ‏ ‏تَرَى فَقَالَ ‏ ‏انْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ

நபி (ஸல்) ’ஜிஅரானா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, உம்ராவிற்காக இஹ்ராம் பூண்ட ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர் தமது தாடியிலும் தலையிலும் மஞ்சள் நிற நறுமணம் பூசியிருந்தார்; (தைக்கப்பட்ட) அங்கி அணிந்திருந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் காணும் இந்த நிலையில் நான் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டிருக்கின்றேன்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்), “நீர் உமது அங்கியைக் களைந்து கொள்க; மஞ்சள் நிற நறுமணத்தைக் கழுவிக் கொள்க; உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.01, ஹதீஸ் எண்: 2019

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّ ‏ ‏يَعْلَى ‏ ‏كَانَ يَقُولُ ‏ ‏لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏لَيْتَنِي أَرَى نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ يُنْزَلُ عَلَيْهِ فَلَمَّا كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْجِعْرَانَةِ ‏ ‏وَعَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ عَلَيْهِ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ ‏ ‏عُمَرُ ‏ ‏إِذْ جَاءَهُ رَجُلٌ عَلَيْهِ ‏ ‏جُبَّةُ ‏ ‏صُوفٍ ‏ ‏مُتَضَمِّخٌ ‏ ‏بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ ‏ ‏تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي ‏ ‏جُبَّةٍ ‏ ‏بَعْدَ مَا ‏ ‏تَضَمَّخَ ‏ ‏بِطِيبٍ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَاعَةً ثُمَّ سَكَتَ فَجَاءَهُ الْوَحْيُ فَأَشَارَ ‏ ‏عُمَرُ ‏ ‏بِيَدِهِ إِلَى ‏ ‏يَعْلَى بْنِ أُمَيَّةَ ‏ ‏تَعَالَ فَجَاءَ ‏ ‏يَعْلَى ‏ ‏فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُحْمَرُّ الْوَجْهِ ‏ ‏يَغِطُّ ‏ ‏سَاعَةً ثُمَّ ‏ ‏سُرِّيَ ‏ ‏عَنْهُ فَقَالَ أَيْنَ الَّذِي سَأَلَنِي عَنْ الْعُمْرَةِ آنِفًا فَالْتُمِسَ الرَّجُلُ فَجِيءَ بِهِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ وَأَمَّا ‏ ‏الْجُبَّةُ ‏ ‏فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ

யஅலா பின் உமய்யா (ரலி), உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)” என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் (ஒரு முறை) தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப் பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) உள்ளிட்ட அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒருவர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் இஹ்ராம் பூண்டவர் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அவரை நபி (ஸல்) சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப் பெற்றது. உடனே உமர் (ரலி), ‘இங்கு வாருங்கள்’ என சைகையால் என்னை அழைத்தார்கள்.

நான் (யஅலா) சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில், குறட்டை விட்டபடி சிறிது நேரம் காணப் பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த நிலை விலகியது. அப்போது நபி (ஸல்), “சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். அவர் தேடப்பட்டு, அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் நபி (ஸல்), “உம்மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி) வழியாக அவருடைய மகன் ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)