அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2857

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْوَلِيدِ الْمَكِّيُّ ‏ ‏وَهُوَ جَالِسٌ عِنْدَ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَأَنْ ‏ ‏تُشْتَرَى النَّخْلُ حَتَّى ‏ ‏تُشْقِهَ ‏
‏وَالْإِشْقَاهُ أَنْ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ أَوْ يُؤْكَلَ مِنْهُ شَيْءٌ وَالْمُحَاقَلَةُ أَنْ يُبَاعَ الْحَقْلُ بِكَيْلٍ مِنْ الطَّعَامِ مَعْلُومٍ وَالْمُزَابَنَةُ أَنْ يُبَاعَ النَّخْلُ بِأَوْسَاقٍ مِنْ التَّمْرِ وَالْمُخَابَرَةُ الثُّلُثُ وَالرُّبُعُ وَأَشْبَاهُ ذَلِكَ ‏ ‏


قَالَ ‏ ‏زَيْدٌ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَذْكُرُ هَذَا عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். ‘கனிதல்’ என்பது, பழம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். ‘முஹாகலா’ என்பது, (கதிரிலுள்ள) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். ‘முகாபரா’ என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை(க் குத்தகைக்கு)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘இந்த ஹதீஸை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) ‘ஆம்’ என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸைத் பின் அபீ உனைஸா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: