و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُخَابَرَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُشْقِحَ
قَالَ قُلْتُ لِسَعِيدٍ مَا تُشْقِحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’, ‘முஹாகலா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள செங்) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ‘கனிதல்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்பதற்கு ஏற்றவாறு மஞ்சளாக / சிவப்பாக மாறுவது’ என விடையளித்தார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார்.