அத்தியாயம்: 36, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3661

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

كُنْتُ سَاقِيَ الْقَوْمِ يَوْمَ حُرِّمَتِ الْخَمْرُ فِي بَيْتِ أَبِي طَلْحَةَ وَمَا شَرَابُهُمْ إِلاَّ الْفَضِيخُ الْبُسْرُ وَالتَّمْرُ ‏.‏ فَإِذَا مُنَادٍ يُنَادِي فَقَالَ اخْرُجْ فَانْظُرْ فَخَرَجْتُ فَإِذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ – قَالَ – فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَاهْرِقْهَا ‏.‏ فَهَرَقْتُهَا فَقَالُوا أَوْ قَالَ بَعْضُهُمْ قُتِلَ فُلاَنٌ قُتِلَ فُلاَنٌ وَهِيَ فِي بُطُونِهِمْ  – قَالَ فَلاَ أَدْرِي هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ – فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ‏}‏

மது தடை செய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய செம்பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே அவர்கள் அருந்துபவர்களாக இருந்தனர்.

ஒரு பொது அறிவிப்பாளர்,  (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்), “மது தடை செய்யப்பட்டுவிட்டது (மக்களே!)” என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) (என்னிடம்), “வெளியே போய் பார்(த்து வா)” என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர், “அறிந்துகொள்ளுங்கள். மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.

(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) என்னிடம், “வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு” என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்துக்) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.

அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) “மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்னவர் கொல்லப்பட்டார்; இன்னவர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)” என்று கூறினர்.

(இந்த வாசகம் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை என அறிவிப்பாளர்களுள் ஒருவர் கூறுகின்றார்).

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து, (பாவங்களிலிருந்து) தற்காத்துக் கொண்டு, மேலும் நம்பிக்கை கொண்டு, மென்மேலும் நற்செயல்கள் செய்து வருவார்களானால் … (தற்போது) தடுக்கப்பட்டவற்றைக் கடந்த காலத்தில் புசித்து/ருசித்துவிட்டவை குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான் ” எனும் (5:93) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment