حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ جَمِيعًا عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ :
أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ
زَادَ يَحْيَى فِي حَدِيثِهِ عَنْ ابْنِ عُلَيَّةَ فَحَدَّثْتُ بِهِ أَيُّوبَ فَقَالَ إِلَّا الْإِقَامَةَ
தொழுகை அழைப்பு (அதானில்) இரட்டையாகவும் தொழுகை அறிவிப்பு (இகாமத்தில்) ஒற்றையாகவும் சொற்றொடரை அமைத்துக் கொள்ளுமாறு பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
குறிப்பு :
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், ” (இகாமத்தில் சொல்லப்படும்) ‘கத் காமத்திஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.