و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :
ذَكَرُوا أَنْ يُعْلِمُوا وَقْتَ الصَّلَاةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ بِهَذَا الْإِسْنَادِ لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا
மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொழுகை நேரத்தை அறிவிக்கும் முறையை உருவாக்குவது குறித்து நபித்தோழர்கள் கலந்து பேசினர். அப்போது சிலர், “நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம்” என்றனர். (இரண்டும் யூத-கிறிஸ்தவக் கலாச்சாரம் என்பதால் புதிய முறையாக ‘அதான்’ எனும்) தொழுகைக்கான அழைப்புச் சொற்களை இரட்டைப்படையாகவும் இகாமத் எனும் தொழுகை அறிவிப்புச் சொற்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) கட்டளை இடப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
உஹைப் (ரஹ்) மற்றும் காலித் அல்-ஹத்தா வழி அறிவிப்புகள், “முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது …” எனத் தொடங்குகிறது. அதில், “நெருப்பு மூட்டுவோம்” எனும் ஆலோசனை இடம்பெறவில்லை.