حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ قَالَ :
صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ ثُمَّ سَلَّمَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு (நான்கு ரக்அத்கள் கொண்ட) தொழுகையில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவித்து முடித்தபின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸலாம் கொடுப்பதை எதிர்பாத்துக் காத்திருந்தபோது, அந்த அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)