و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ قَالَ ح و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ الْأَسْدِيِّ حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ يُكَبِّرُ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنْ الْجُلُوسِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு) லுஹ்ருத் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு ஸஜ்தாவின் போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு ஸஜ்தாக்கள் செய்தனர். (முதலாவது அத்தஹியாத்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் அவ்வாறு செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் புஹைனா அல்-அஸ்தீ (ரலி)
குறிப்பு :
அறிவிப்பாளர் அப்துல்லாஹ், பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலமான அல்-அஸ்தீ குலத்தவராவார்.