அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2148

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَتْ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏فِي الْحَجِّ لِأَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَاصَّةً

‘தமத்துஉ’ முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

குறிப்பு : பார்க்க ஹதீஸ் எண் 2136.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2147

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏قَالَ ‏

‏اجْتَمَعَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏فَكَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏أَوْ الْعُمْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مَا تُرِيدُ إِلَى أَمْرٍ فَعَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَنْهَى عَنْهُ فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏دَعْنَا مِنْكَ فَقَالَ إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَدَعَكَ فَلَمَّا أَنْ رَأَى ‏ ‏عَلِيٌّ ‏ ‏ذَلِكَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِمَا جَمِيعًا

‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்திருந்த காலம் அது. எனவே, அவர்களிடம் அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன (மாற்றத்தை) விரும்புகின்றீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “நீங்கள் (இந்த முடிவில்) எம்மை விட்டுவிடுங்கள்!” என்று கூற, அதற்கு அலீ (ரலி) “என்னால் உங்களை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது” என்று சொன்னார்கள். எனினும், தமது நிலையில் உஸ்மான் (ரலி) (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி), ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து (கிரான்) தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)

குறிப்பு : உஸ்ஃபான் எனும் ஊர் மதீனாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2146

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ ‏

‏كَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏وَكَانَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏يَأْمُرُ بِهَا فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏لِعَلِيٍّ ‏ ‏كَلِمَةً ثُمَّ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏لَقَدْ عَلِمْتَ أَنَّا قَدْ ‏ ‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَجَلْ وَلَكِنَّا كُنَّا خَائِفِينَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ (ஹஜ்) செய்ய வேண்டாம் எனத் தடை விதித்திருந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) ‘தமத்துஉ’ செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி), அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி), “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தமத்துஉ’ செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “ஆம்; ஆயினும் அப்போது நாம் அச்சத்திலிருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்).

குறிப்பு : “நாம் அச்சத்திலிருந்தோம்” என்று உஸ்மான் (ரலி) கூறியது, “தமத்துஉ முறை ஹஜ்ஜில் குறை உண்டாகுமோ என்ற ஐயத்திலிருந்தோம்” எனும் பொருள் கொள்வதற்கு இடம்பாடுள்ள சொற்றொடராகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2145

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏

‏أَنَّهُ كَانَ يُفْتِي ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ رُوَيْدَكَ بِبَعْضِ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدُ حَتَّى لَقِيَهُ بَعْدُ فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏قَدْ عَلِمْتُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَهُ وَأَصْحَابُهُ وَلَكِنْ كَرِهْتُ أَنْ يَظَلُّوا ‏ ‏مُعْرِسِينَ بِهِنَّ ‏ ‏فِي الْأَرَاكِ ثُمَّ يَرُوحُونَ فِي الْحَجِّ تَقْطُرُ رُءُوسُهُمْ

“தமத்துஉ ஹஜ் செல்லும்” என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒருவர் (வந்து), “நீங்கள் உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) ஹஜ்ஜின் செயல்முறைகளில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார். பிறகு நான் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி),

“நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும், ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) ‘அராக்’ பகுதியில் கூடி மகிழ்ந்து(குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வது எனக்கு வெறுப்பாயிருந்தது. (ஆகவேதான், ஹஜ் பருவத்தின்போது உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு : ஹஜ் பருவத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு, அதை நிறைவேற்றிவிட்டு. ஹஜ்ஜுக்கு இடைப்பட்ட நாட்களில் மனைவியருடன் கூடி மகிழ்ந்துவிட்டு, பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்குத் தனியாக இஹ்ராம் பூண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவது ‘தமத்துஉ’ முறை ஹஜ் ஆகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2144

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ ‏ ‏بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ هَلْ سُقْتَ مِنْ ‏ ‏هَدْيٍ ‏ ‏قُلْتُ لَا قَالَ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ حِلَّ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي وَغَسَلَتْ رَأْسِي فَكُنْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ فِي إِمَارَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَإِمَارَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَإِنِّي لَقَائِمٌ بِالْمَوْسِمِ إِذْ جَاءَنِي رَجُلٌ فَقَالَ إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏فَقُلْتُ أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ بِشَيْءٍ ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَهَذَا أَمِيرُ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا فَلَمَّا قَدِمَ قُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا الَّذِي أَحْدَثْتَ فِي شَأْنِ ‏ ‏النُّسُكِ ‏ ‏قَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ ‏”‏وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ “‏

وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ نَبِيِّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَام فَإِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ ‏ ‏الْهَدْيَ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عُمَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَنِي إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ فَوَافَقْتُهُ فِي الْعَامِ الَّذِي حَجَّ فِيهِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏كَيْفَ قُلْتَ حِينَ أَحْرَمْتَ قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏إِهْلَالًا ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَلْ سُقْتَ ‏ ‏هَدْيًا ‏ ‏فَقُلْتُ لَا قَالَ فَانْطَلِقْ فَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَحِلَّ ثُمَّ ‏ ‏سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَسُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டுள்ளேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் உம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அதற்கவர்கள், “அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.

நான் இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக் கொள்ளலாம் என்றே) அபூபக்ரு (ரலி) ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) ஆட்சியி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, என்னிடம் ஒருவர் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் செயல்முறைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொன்னார். உடனே நான் “மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்தி விடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன். உமர் (ரலி) வந்தபோது அவர்களிடம் நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் செயல்முறைகளில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி), “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், ‘அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்’ (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) குர்பானிப் பிராணிகளைப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு : அபூஉமைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் சரியாக அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூமூஸா! நீர் இஹ்ராமின்போது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டுள்ளார்களோ அதற்காகவே நான் இஹ்ராம் பூணுகின்றேன் என்று (தல்பியா) சொன்னேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டு வந்துள்ளீரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். “அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்க” என்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2143

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ ‏

‏قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏مُنِيخٌ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏أَحَجَجْتَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ بِمَ ‏ ‏أَهْلَلْتَ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ ‏ ‏بِإِهْلَالٍ ‏ ‏كَإِهْلَالِ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَقَدْ أَحْسَنْتَ طُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَأَحِلَّ قَالَ فَطُفْتُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ ‏ ‏بَنِي قَيْسٍ ‏ ‏فَفَلَتْ رَأْسِي ثُمَّ ‏ ‏أَهْلَلْتُ ‏ ‏بِالْحَجِّ قَالَ فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى كَانَ فِي خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ يَا ‏ ‏أَبَا مُوسَى ‏ ‏أَوْ يَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏ ‏رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدَكَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فُتْيَا ‏ ‏فَلْيَتَّئِدْ ‏ ‏فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَأْتَمُّوا قَالَ فَقَدِمَ ‏ ‏عُمَرُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ كِتَابَ اللَّهِ يَأْمُرُ بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், “ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நீர் எதற்காக இஹ்ராம் பூண்டீர்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) எதற்காக இஹ்ராம் பூண்டார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் பூண்டேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவை (தவாஃப்) சுற்றி, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி(தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க” என்றார்கள்.

அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் சுற்றிவிட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னேன். இவ்வாறு (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கி வந்தேன்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒருவர் வந்து, “அபூமூஸா! (அல்லது) அப்துல்லாஹ் பின் கைஸ்! உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் செயல்முறைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறினார்.

அதன் பின்னர் நான், “மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்துவதை) அவர் நிறுத்தி வைக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்” என்று கூறினேன்.

உமர் (ரலி) வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) “நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலிப் பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2142

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏قَالَ ‏

‏أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاقِفًا مَعَ النَّاسِ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ إِنَّ هَذَا لَمِنْ ‏ ‏الْحُمْسِ ‏ ‏فَمَا شَأْنُهُ هَاهُنَا وَكَانَتْ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏تُعَدُّ مِنْ ‏ ‏الْحُمْسِ

நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒருமுறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாப் பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) ‘ஹும்ஸு'(க் குறைஷி)களுள் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என்று எண்ணிக் கொண்டேன். குறைஷியர், (கடினமான சமயப் பற்றுடைய) ஹும்ஸுகளாகவே கருதப் பட்டனர்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2141

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كَانَتْ ‏ ‏الْعَرَبُ ‏ ‏تَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏عُرَاةً إِلَّا ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَالْحُمْسُ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَا وَلَدَتْ كَانُوا يَطُوفُونَ عُرَاةً إِلَّا أَنْ تُعْطِيَهُمْ الْحُمْسُ ثِيَابًا فَيُعْطِي الرِّجَالُ الرِّجَالَ وَالنِّسَاءُ النِّسَاءَ وَكَانَتْ ‏ ‏الْحُمْسُ ‏ ‏لَا يَخْرُجُونَ مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانَ النَّاسُ كُلُّهُمْ يَبْلُغُونَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏فَحَدَّثَنِي أَبِي عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏ ‏الْحُمْسُ هُمْ الَّذِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِمْ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏

قَالَتْ كَانَ النَّاسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏وَكَانَ ‏ ‏الْحُمْسُ ‏ ‏يُفِيضُونَ ‏ ‏مِنْ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏يَقُولُونَ لَا ‏ ‏نُفِيضُ ‏ ‏إِلَّا مِنْ الْحَرَمِ فَلَمَّا نَزَلَتْ ‏ …” ‏‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“ ‏رَجَعُوا إِلَى ‏ ‏عَرَفَاتٍ

இறையில்லம் கஅபாவை (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபியர் நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள் – (சமயப் பற்றில்) கடும்போக்குள்ள) ‘ஹும்ஸு’களைத் தவிர! ‘ஹும்ஸு’ என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். ஹும்ஸுகள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர, அரபியர் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவர். கடினமான சமயப் பற்றுடைய ஹும்ஸுகள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்குத் தங்கு)வார்கள்.

“வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ் ‘…பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்‘ என்று கூறியது ‘ஹும்ஸுகளைப் பற்றித்தான்” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸுகள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், “நாங்கள் ‘ஹரம்’ (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்” என்று கூறுவார்கள். பின்னர் இந்த (2:199) வசனம் அருளப்பட்டதும் அரஃபாவிலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.21, ஹதீஸ் எண்: 2140

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ ‏ ‏قُرَيْشٌ ‏ ‏وَمَنْ ‏ ‏دَانَ ‏ ‏دِينَهَا يَقِفُونَ ‏ ‏بِالْمُزْدَلِفَةِ ‏ ‏وَكَانُوا يُسَمَّوْنَ ‏ ‏الْحُمْسَ ‏ ‏وَكَانَ سَائِرُ ‏ ‏الْعَرَبِ ‏ ‏يَقِفُونَ ‏ ‏بِعَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ نَبِيَّهُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يَأْتِيَ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَيَقِفَ بِهَا ثُمَّ ‏ ‏يُفِيضَ ‏ ‏مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ …” ‏ثُمَّ ‏ ‏أَفِيضُوا ‏ ‏مِنْ حَيْثُ ‏ ‏أَفَاضَ ‏ ‏النَّاسُ“

குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (அறியாமைக் கால ஹஜ்ஜின்போது, தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். அவர்கள் ‘(சமயப் பற்றில்) கடும்போக்குள்ள (ஹும்ஸு) குழுவினர்’ எனப் பெயர் பெற்றவர்கள். மற்ற எல்லா அரபியரும் அரஃபாப் பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) ‘அரஃபா’வுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான்:.“… பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 15.20, ஹதீஸ் எண்: 2139

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَتَى الْحَجَرَ ‏ ‏فَاسْتَلَمَهُ ‏ ‏ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் ‘ஹஜருல் அஸ்வது’க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்து சென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் இயல்பாக நடந்தும் சுற்றினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)